Friday, 12 June 2026

3.கைத்தொழிலாளியின் மறைக்கப்பட்ட கண்ணீர்”Part 01(3.1) — “சந்தைக்கு செல்லாத பொருட்கள்”

#முர்ஷித் 

ஒரு கைத்தொழிலாளியின் மிகப் பெரிய வலி என்ன தெரியுமா?
பொருள் தயாரிக்க முடியாதது அல்ல.
தயாரித்த பொருள் விற்கப்படாதது.

கைத்தொழில் துறையில் பணியாற்றிய பல ஆண்டுகளில், நான் எண்ணற்ற கைத்தொழிலாளர்களின் வீடுகளுக்கும் சிறிய உற்பத்தி நிலையங்களுக்கும் சென்றிருக்கிறேன்.

அங்கே நான் பார்த்த மிக அமைதியான சோகங்களில் ஒன்று —
அழகாக தயாரிக்கப்பட்ட பொருட்கள், விற்கப்படாமல் மூலைகளில் குவிந்திருந்த காட்சிகள்.

ஒரு பெண் பல நாட்கள் உழைத்து தயாரித்த handicrafts.
ஒரு குடும்பம் தயாரித்த traditional food products.
ஒரு இளைஞன் அச்சிட்ட exercise books.
ஒரு வயதான கைவினைஞர் வடிவமைத்த பனைப்பொருட்கள்.

தரம் இருந்தது.
உழைப்பு இருந்தது.
அன்பு இருந்தது.

ஆனால் சந்தை இல்லை.

இது இலங்கையின் பல சிறு கைத்தொழில்களின் மறைக்கப்பட்ட உண்மை.

பல entrepreneurs product உருவாக்க கற்றுக்கொள்கிறார்கள்.
ஆனால் market access உருவாக்க கற்றுக்கொள்ளவில்லை.

இதனால் அவர்கள்:

local buyers-ஐ மட்டுமே நம்புகிறார்கள்

seasonal sales-இல் சிக்கிக்கொள்கிறார்கள்

middlemen-களின் கட்டுப்பாட்டுக்குள் செல்கிறார்கள்

low profit cycle-இல் சிக்கிக்கொள்கிறார்கள்

ஒரு பொருள் தயாரிப்பது தொழிலின் பாதி மட்டுமே.
அதை சரியான customer- இடம் கொண்டு சேர்ப்பதே மற்ற பாதி.

இன்றைய உலகில் market என்பது வெறும் physical shop அல்ல.

அது:

•Facebook
•WhatsApp
•TikTok
•Instagram
•Online marketplaces
•Digital catalogs
•Delivery platforms

இவைகளின் கூட்டுத்தொகையாக மாறிவிட்டது.

ஆனால் இன்னும் பல கிராமிய கைத்தொழிலாளர்கள் இந்த மாற்றத்திலிருந்து விலகியே இருக்கிறார்கள்.

இதனால் ஒரு பெரிய முரண்பாடு உருவாகிறது:

நல்ல products இருக்கின்றன.
ஆனால் visibility இல்லை.

உழைக்கும் கைகள் இருக்கின்றன.
ஆனால் market connection இல்லை.

இதுவே பல சிறு தொழில்களின் அமைதியான பொருளாதார சோகமாக மாறியுள்ளது.

சில நேரங்களில் நான் நினைக்கிறேன் —
இலங்கையின் பல கிராமங்களில் மறைந்து கிடப்பது வெறும் பொருட்கள் அல்ல.
அவை பயன்படுத்தப்படாத திறமைகள்.

ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர வேண்டுமெனில், அதன் உற்பத்தியாளர்கள் சந்தையை அடைய வேண்டும்.

அதற்காக:

•digital literacy
•branding awareness
•packaging improvement
•e-commerce training
•market linkage programs

இவை மிகவும் அவசியமானவை.

ஒரு கைத்தொழிலாளி product தயாரிப்பதில் மட்டும் சிக்கிக்கொள்ளக்கூடாது.
அவர்:

•customer psychology
•market trends
•online promotion
•pricing strategy

இவைகளையும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஏனெனில் இன்று சந்தையில் நல்ல பொருள் மட்டும் வெற்றி பெறுவதில்லை.
தன்னை சரியாக அறிமுகப்படுத்திக்கொள்ளும் பொருள்தான் வெற்றி பெறுகிறது.

ஒரு மிக ஆழமான உண்மை என்னவெனில் 

விற்கப்படாத ஒரு பொருளின் பின்னால், பல நேரங்களில் ஒரு குடும்பத்தின் உடைந்த நம்பிக்கையும் இருக்கும்.

அதனால் market access என்பது வெறும் business issue அல்ல.
அது ஒரு சமூக-பொருளாதார நீதி கேள்வி.

ஒரு கைத்தொழிலாளியின் பொருள் சந்தையை அடையும் போது,
அவரின் உழைப்பும் மரியாதையுடன் பயணிக்கத் தொடங்குகிறது.

(தொடரும்…)

#SmallBusiness
#Entrepreneurship
#SupportLocal
#MadeInSriLanka
#DigitalMarketing

Tuesday, 2 June 2026

இலங்கையின் சைபர் நிதி மோசடிகளும் — டிஜிட்டல் பாதுகாப்பின் அவசியமும்

எம்.ஏ.எம். முர்ஷித்
 (Digital Safety Master Trainer, Digizen )

இலங்கையில் மக்களின் வரிப்பணம், அரசு நிதி, வெளிநாட்டு அனுப்பல் பணம் என்று கோடிக்கணக்கில் அண்மைக்காலமாக காணாமல் போகின்ற சம்பவங்களை செய்திகளூடாக கேள்விப்படுவது வாடிக்கையாகி வருகிறது.
 இங்கு பணம் இருந்தது உண்மை, போனதும் உண்மை. யாருக்கும் தெரியாமல், எப்படியோ, எங்கோ போய்விடுகிறது.

இது வழக்கமான ஊழல் அல்ல. முன்னைய காலங்களில் நடந்த கொள்ளைகளிலிருந்து இது அடிப்படையிலேயே வேறுபட்டது. அதை "தெரிந்த திருடு" என்று சொல்லலாம்; குற்றவாளி தெரியும், முறை தெரியும், தடம் தெரியும். 

இப்போது நடப்பதோ "தெரியாத திருடு" ; குற்றவாளி எங்கிருக்கிறான் என்று தெரியாது, பணம் எந்த வழியில் போனது என்று தெரியாது, மீட்க முடியுமா என்றும் தெரியாது.

01 — என்ன நடக்கிறது? சம்பவங்களின் பட்டியல்

கடந்த சில மாதங்களாக இலங்கையில் வெளிவந்த நிதி மோசடி சம்பவங்களை ஒன்றன்பின் ஒன்றாக பார்க்கும்போது, இது தனித்தனி சம்பவங்கள் அல்ல — ஒரு முறையான, திட்டமிட்ட தாக்குதல் வடிவம் என்பது புரியும்.

சம்பவம் 01: 
கடன் மீளச் செலுத்துகை செயன்முறையின் போது 800 மில்லியன் ரூபா (சுமார் 2.5 மில்லியன் டொலர்) வேறு கணக்கிற்கு திருப்பி விடப்பட்டது.

 அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு சேர வேண்டிய தொகை வேறு கணக்கில் மறைந்தது. இதனோடு தொடர்புடைய அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டமை மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியது.

சம்பவம் 02:
 தபால் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை போலியாக செய்த ஒரு மோசடி தளம் கட்டணங்களை அறவீடு செய்தது. அமெரிக்காவுக்கு அனுப்பப்பட வேண்டிய 6 லட்சம் டொலர் காணாமல் போனது ; அமெரிக்கா குறித்த தொகை கிடைக்கவில்லை என்று உறுதிப்படுத்தியது.

சம்பவம் 03:
ஸ்ரீலங்கன் விமான சேவையின் துபாய் மற்றும் சென்னை அலுவலகங்களில் மூன்றாம் தரப்பு ஊடுருவல் மூலம் 974,000 திர்ஹம் (சுமார் 2.6 கோடி ரூபா) சூறையாடப்பட்டது.

சம்பவம் 04:
மக்கள் வங்கியின் வெளிநாட்டு பணவனுப்பல் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 656 மில்லியன் ரூபா இழக்கப்பட்டது.

சம்பவம் 05:
அஸ்வெசும கொடுப்பனவின் போது 2.48 மில்லியன் ரூபா இரட்டைக் கொடுப்பனவாக மேற்கொள்ளப்பட்டது.

இவை வெளியில் வந்தவை மட்டுமே. வெளியில் வராதவை இன்னும் எத்தனை என்பது யாருக்கும் தெரியாது — அதுவே மிகவும் கவலைக்குரிய விஷயம்.

02 - தாக்குதல் வகைகளை புரிந்துகொள்வோம்

மேற்கண்ட சம்பவங்களை மூன்று தனித்தனியான தாக்குதல் வகைகள் இங்கே செயல்பட்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது. இந்த வேறுபாட்டை புரிந்துகொள்வது ஏன் முக்கியம்?

 ஏனென்றால் ஒவ்வொரு தாக்குதலுக்கும் தனித்தனியான தடுப்பு முறை தேவை; ஒரே மருந்தால் மூன்று நோயையும் குணப்படுத்த முடியாது.

BEC — வணிக மின்னஞ்சல் சமரசம் (Business Email Compromise)

இது உலகின் மிகவும் லாபகரமான சைபர் குற்றமாக FBI அடையாளப்படுத்தியுள்ளது. 2023-ல் மட்டும் உலக அளவில் BEC மூலம் 2.9 பில்லியன் டொலர் திருடப்பட்டது.

முறை எளிமையானது, ஆனால் அதிர்ச்சியூட்டும் விதத்தில் திறமையானது. திருடர்கள் நேரடியாக வங்கியை தாக்குவதில்லை. ஒரு அதிகாரியின் மின்னஞ்சலை போலி செய்கிறார்கள் அல்லது உண்மையான மின்னஞ்சல் கணக்கிலேயே நுழைந்து விடுகிறார்கள். பிறகு, கொடுப்பனவு செய்ய வேண்டிய நேரத்தில் மட்டும் bank account விவரங்களை நுட்பமாக மாற்றிவிடுகிறார்கள். பரிவர்த்தனை முழுவதும் சட்டபூர்வமாகவே தெரியும்; ஆனால் பணம் சேருமிடம் மட்டும் தவறு.

இதனால் கண்டுபிடிப்பு மிகவும் தாமதமாகும். சில நேரங்களில் வாரங்கள் அல்லது மாதங்கள் கழித்தே தெரியும்; அப்போது பணம் பல நாடுகளில் உள்ள கணக்குகள் வழியாக சுழற்றப்பட்டு காணாமல் போயிருக்கும்.

Phishing / Spoofed Websites — போலி இணையதள மோசடி

இது இன்னும் நுட்பமான ஒரு தாக்குதல். Domain name-இல் ஒரே ஒரு எழுத்து வித்தியாசம் மட்டுமே — gov.lk க்கு பதிலாக g0v.lk என்று இருக்கும். வடிவமைப்பில் அரசு இணையதளம் போலவே இருக்கும். பாதிக்கப்பட்டவர் வித்தியாசம் புரியாமல் தனது payment details கொடுத்துவிடுவார்.

இதை கண்டுபிடிக்க பயிற்சி பெற்ற கண் தேவை. சாதாரண பயனர் மட்டுமல்ல; அரசு அதிகாரிகள் கூட இதில் விழுவார்கள். ஏனென்றால் இந்த தாக்குதல் மனித மனோவியலை சுரண்டுகிறது; அவசரம், அதிகாரம், நம்பிக்கை ஆகிய மூன்றையும் ஆயுதமாக பயன்படுத்துகிறது.

Third-Party Infiltration — மூன்றாம் தரப்பு ஊடுருவல்

இது இன்றைய மிக அதிகரித்துவரும் தாக்குதல் முறை. நேரடியாக மையமான அமைப்பை தாக்காமல் ; அதனோடு இணைக்கப்பட்ட வெளிப்புற அமைப்புகள் வழியாக உள்ளே நுழைவது. வெளிநாட்டு அலுவலகங்கள், கிளை நிறுவனங்கள், துணை ஒப்பந்தக்காரர்கள், மூன்றாம் தரப்பு மென்பொருள் வழங்குநர்கள் போன்றவை அனைத்தும் "நுழைவுவாயில்களாக" மாறலாம்.

2020-ல் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய SolarWinds தாக்குதல் இந்த வகையில்தான் இருந்தது ; அமெரிக்காவின் பல அரசு நிறுவனங்கள் மூன்றாம் தரப்பு மென்பொருள் வழியாக திருடப்பட்டன. இலங்கையில் விமான சேவை அலுவலகங்களில் நடந்தது இதே வகை.

 03 — மனித காரணி: மறக்கப்படும் மிக முக்கியமான பாடம்

Cybersecurity நிபுணர்களிடையே ஒரு பொதுவான கூற்று உண்டு: "Technology is never the weakest link — humans are."

BEC தாக்குதல்களில் 90% வெற்றியடைவதற்கு காரணம் தொழில்நுட்ப பலவீனம் அல்ல — மனித பலவீனம். இந்த உண்மை இலங்கை சூழலில் இன்னும் முக்கியமானது.

ஏன் என்றால், நம் நிர்வாக கலாசாரத்தில் சில குறிப்பிட்ட பலவீனங்கள் உள்ளன. மின்னஞ்சல் தகவல்தொடர்பை சரிபாராமல் நம்புவது, அதிகாரிகளின் உத்தரவை கேள்வி கேட்காமல் நிறைவேற்றுவது, புதிய கணக்கு விவரங்களை மாற்றும் கோரிக்கைகளை தொலைபேசியில் உறுதிப்படுத்தாமல் செயல்படுவது — இவை நம் நிர்வாகத்தில் இன்னும் நடைமுறையில் உள்ளன.

கூடுதலாக, Insider Threat என்ற உள்நோக்கிய அச்சுறுத்தலும் இங்கே இருக்கிறது. உள்ளே யாரோ ஒருவர் வெளியில் உள்ள குற்றவாளிகளுக்கு வழிகாட்டியிருக்கலாம் என்ற சாத்தியத்தை விசாரணையாளர்கள் தீவிரமாக எடுக்க வேண்டும். Insider Threat என்பது உலகின் மிகவும் சிக்கலான Cybersecurity சவால்களில் ஒன்று ஏனென்றால் அங்கு எதிரி வெளியே இல்லை, உள்ளேயே இருக்கிறான்.

04 : இலங்கை இப்போது எங்கே நிற்கிறது? Or Cybersecurity விஷயத்தில் இலங்கை எந்த நிலையில் இருக்கிறது?

கட்டமைப்பு அளவில் இன்னும் நாம் பின்தங்கியிருக்கிறோம். CERT (Sri Lanka Computer Emergency Readiness Team) இருக்கிறது, ஆனால் அதன் ஆட்பலம், பட்ஜெட், அதிகாரம் என்பன இன்னும் போதுமானதாக இல்லை. Cybercrime Investigation Division இருக்கிறது, ஆனால் Digital Forensics திறன் வரையறுக்கப்பட்டதாக உள்ளது. சர்வதேச Cybercrime ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் முழுமையாக இல்லை.

ஒப்பீட்டளவில் பார்க்கும்போது, இந்தியா தனது National Cyber Security Policy வலுப்படுத்தி, Indian Cyber Crime Coordination Centre (I4C) மூலம் ஒருங்கிணைந்த Cyber Crime Investigation நடத்துகிறது. சிங்கப்பூர் Cybersecurity Agency of Singapore (CSA) மூலம் தேசிய அளவிலான Cyber Threat Intelligence பகிர்கிறது. எஸ்தோனியா உலகின் மிக பாதுகாப்பான டிஜிட்டல் அரசாங்கமாக மாறியிருக்கிறது.

இவர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் தொழில்நுட்பம் மட்டுமல்ல அரசியல் சித்தம் மற்றும் முன்னுரிமை தரும் விதம்.

05: அரசாங்கத்திற்கான கொள்கை வலியுறுத்தல்கள்

ஒரு Digital Safety & security பயிற்சியாளராக, கீழ்க்கண்ட நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

உடனடி நடவடிக்கைகள் (0-6 மாதங்கள்):

அனைத்து அரசு நிதி பரிவர்த்தனைகளுக்கும் இரட்டை அங்கீகாரம் (Two-Factor Authentication) மற்றும் Dual Authorization கட்டாயமாக்க வேண்டும். ஒரே ஒரு அதிகாரியின் அனுமதியில் பெரும் தொகைகள் மாறும் வழக்கம் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். எந்த கொடுப்பனவுக்கும் குறைந்தது இரண்டு தனித்தனி அதிகாரிகளின் அனுமதி கட்டாயம்.

Bank account விவரங்களில் ஏதாவது மாற்றம் வந்தால் — மின்னஞ்சல் மூலம் வந்தாலும் சரி — அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்ணில் நேரடியாக உறுதிப்படுத்துவதை Standard Operating Procedure-ஆக மாற்ற வேண்டும். இந்த ஒரு நடவடிக்கை மட்டுமே BEC தாக்குதல்களில் 80% தடுக்கும்.

குறுகிய கால நடவடிக்கைகள் (6-18 மாதங்கள்):

CERT-ஐ தனித்த பட்ஜெட்டுடன் வலுப்படுத்தி, நிதி நிறுவனங்களுக்கான 24/7 Cyber Incident Response கட்டமைப்பை உருவாக்க வேண்டும். Cybercrime Investigation Division-க்கு Digital Forensics Lab மற்றும் பயிற்சி பெற்ற நிபுணர்கள் தேவை.

அனைத்து அரசு நிதி அதிகாரிகளுக்கும் BEC, Social Engineering, Phishing விழிப்புணர்வு பயிற்சி ஆண்டுதோறும் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும். பயிற்சி என்பது ஒரு முறை செய்து விட்டு மறக்கும் விஷயம் அல்ல — Cyber threats தினசரி பரிணமிக்கின்றன, பயிற்சியும் தினசரி புதுப்பிக்கப்பட வேண்டும்.

நீண்ட கால கட்டமைப்பு (18 மாதங்கள் - 3 ஆண்டுகள்):

இந்தியா, அவுஸ்திரேலியா, UAE, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுடன் Cyber Crime துறை அளவிலான ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் அவசியம். இல்லாமல் கடலுக்கு அப்பால் சென்ற பணத்தை மீட்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

National Cybersecurity Strategy ஒன்றை வெளியிட்டு, ஒவ்வொரு அமைச்சகத்திற்கும் Cybersecurity Roadmap தயாரிக்க வேண்டும். Digital Forensics மற்றும் Cyber Investigation-இல் சிறப்பு பட்டப்படிப்புகளை உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் தொடங்க வேண்டும்.

நிதி இழப்புகள் குறித்த வெளிப்படையான பொது அறிவிப்பு முறையை கட்டாயமாக்க வேண்டும். மறைப்பு மக்களின் நம்பிக்கையை அழிக்கும்; வெளிப்படைத்தன்மை மட்டுமே நம்பிக்கையை மீட்கும்.

06: நமது சமூகத்தின் சமூகத்திற்கான சிறப்பு எச்சரிக்கை

இந்த விவகாரத்தில் நம் சமூகத்தை நேரடியாக பாதிக்கும் ஒரு கோணம் இருக்கிறது — அதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் பேசும் சமூகத்தினர் பெரும்பாலும் வளைகுடா நாடுகளிலிருந்து — சவுதி அரேபியா, UAE, கட்டார், குவைத், ஒமான் — தமது குடும்பங்களுக்கு பணம் அனுப்புகிறார்கள். இலங்கைக்கு வரும் மொத்த remittance-இல் இந்த சமூகத்தின் பங்களிப்பு கணிசமானது. மக்கள் வங்கியின் பணவனுப்பல் கட்டமைப்பில் நடந்த இழப்பு நேரடியாக இந்த சமூகத்தை பாதிக்கிறது.

பணவனுப்பல் பாதுகாப்பு:

 அதிகாரப்பூர்வமான வங்கி சேனல்கள் மட்டுமே பயன்படுத்துவது கட்டாயம். தனியார் hawala அமைப்புகள் மூலம் பணம் அனுப்புவதில் உள்ள அபாயங்களை புரிந்துகொள்ள வேண்டும். Transaction confirmation-ஐ எப்போதும் பெறுநரிடம் நேரடியாக அல்லது தொலைபேசியில் பேசி உறுதிசெய்யுங்கள்.

போலி இணையதள கவனிப்பு:

எந்த அரசு இணையதளத்தையும் பயன்படுத்தும்போது URL-ஐ கவனமாக சரிபாருங்கள். gov.lk என்ற அதிகாரப்பூர்வ domain-ஐ மட்டுமே நம்புங்கள்.

 சந்தேகமிருந்தால் நேரில் சென்று உறுதிப்படுத்துங்கள் — இரண்டு மணி நேரம் செலவழிப்பது, கோடி ரூபா இழப்பதை விட மேலானது.

சமூக அளவில் விழிப்புணர்வு:

மதத்தளங்கள், சமூக அமைப்புகள், பெற்றோர் ஆசிரியர் கூட்டங்கள் என்று Digital Safety & Security விழிப்புணர்வை நாமே பரப்ப வேண்டும். வயதான தலைமுறையினர் குறிப்பாக இந்த மோசடிகளுக்கு பாதிக்கப்படக்கூடியவர்கள். அவர்களுக்கு கல்வி கொண்டு செல்வது நம் பொறுப்பு.

இளைஞர்களுக்கான அழைப்பு:

 நம் சமூகத்தில் தொழில்நுட்பம் படித்த இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தமது அறிவை சமூக சேவையாக பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு பிரதேச சமூக அமைப்பிலும் ஒரு Digital Safety & Security தன்னார்வலர் குழு உருவாக்குவது இன்றைய தேவை.

 07 : இது தவிர்க்க முடியாத சவால் அல்ல

சிலர் சொல்வார்கள்: "Cyber crime-ஐ முழுவதுமாக தடுக்க முடியாது." இது உண்மையே. ஆனால் இதன் பொருள் நாம் கைகட்டி இருக்க வேண்டும் என்பதல்ல.

இந்தியாவின் UPI அமைப்பு மாதந்தோறும் 15 பில்லியன் பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக செயல்படுத்துகிறது. எஸ்தோனியா 2007-ல் ரஷ்யாவிடமிருந்து மிகப்பெரிய Cyber attack-ஐ எதிர்கொண்டு, அதிலிருந்து கற்று, இன்று உலகின் மிக பாதுகாப்பான டிஜிட்டல் அரசாங்கமாக மாறியிருக்கிறது. சிங்கப்பூர் Digital Payment Fraud-ஐ குறைக்க கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வெற்றி பெற்றிருக்கிறது.

இவர்களுக்கு சாத்தியம் என்றால் நமக்கும் சாத்தியம். தேவையானது மூன்றே மூன்று விஷயங்கள்: அரசியல் கொள்கை, தொழில்நுட்ப முதலீடு, மற்றும் மக்களுக்கான வெளிப்படைத்தன்மை.

டிஜிட்டல் யுகத்தில் திருட்டு புதிய வடிவம் எடுத்திருக்கின்றன. அவை இணையத்தில் மறைந்திருக்கின்றன, மில்லி விநாடிகளில் வேலை செய்கின்றன, எல்லை தாண்டி ஓடுகின்றன. இந்த புதிய திருட்டுகளிலிருந்து காக்க பழைய முறைகள் போதாது.

ஆனால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் , தொழில்நுட்பம் ஆயுதமாக இருப்பது போல், தொழில்நுட்பமே கேடயமாகவும் இருக்கிறது. 

1.சரியான கட்டமைப்பு
2 சரியான பயிற்சி
3.சரியான கொள்கை — இந்த மூன்றும் இருந்தால் இந்த திருட்டுகளிலிருந்து காக்கலாம்.

மக்களின் வரிப்பணம் என்பது அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்ட நம்பிக்கை. அந்த நம்பிக்கையை காப்பாற்றுவது ஒவ்வொரு அரசாங்கத்தின் அடிப்படை கடமை.

 டிஜிட்டல் யுகத்தில் அந்த கடமை இன்னும் சிக்கலானது — ஆனால் தவிர்க்க முடியாதது.

திருட்டுப் போன பணத்தை மட்டும் தேடாமல், இன்னும் இன்னும் திருட்டுப் போகாமல் காக்கும் அமைப்பை ( System) கட்டியெழுப்ப வேண்டும். அந்த அமைப்பு கட்டப்படும் வரை, இன்னொரு Digital திருட்டு தடுக்கப்படாது — அது உறுதி.
#முர்ஷித் #CyberSecurityLK #DigitalSafety #SriLanka #CyberCrimeAwareness #Digizen #BECFraud #PhishingAwareness

Friday, 29 May 2026

“மூலதனம் இல்லாமல் தொடங்கிய தொழில்கள்”Part 05 — “சிறு முயற்சியிலிருந்து நிறுவனம் வரை”

#முர்ஷித்

ஒவ்வொரு பெரிய நிறுவனத்தின் பின்னாலும்,
ஒரு காலத்தில் யாரும் கவனிக்காத ஒரு சிறிய ஆரம்பம் இருந்திருக்கிறது.

ஒரு table.
ஒரு machine.
ஒரு notebook.
ஒரு borrowed capital.
ஒரு மனிதனின் நம்பிக்கை.

அதுவே பின்னர் ஒரு நிறுவனமாக மாறுகிறது.

கைத்தொழில் துறையின் கள அனுபவங்களில் நான் பார்த்த மிக அழகான மாற்றங்களில் ஒன்று —
“survival business” ஆக ஆரம்பித்த பல முயற்சிகள், சில ஆண்டுகளுக்குப் பிறகு வேலைவாய்ப்பை உருவாக்கும் நிறுவனங்களாக மாறியிருந்தன.
ஆரம்பத்தில்:

•ஒரே ஒருவரின் உழைப்பு
•மிகக் குறைந்த உற்பத்தி
•local customers மட்டும்
•limited income


ஆனால் மெதுவாக:

•customer trust உருவாகிறது
•product quality மேம்படுகிறது
•market expand ஆகிறது
•புதிய employees சேர்கிறார்கள்
•production capacity அதிகரிக்கிறது

இதுதான் organic business growth.

ஒரு முக்கியமான உண்மை என்னவெனில், வளர்ச்சி ஒரே நாளில் வருவதில்லை.

Social media பல நேரங்களில் success-ஐ instant achievement போல காட்டுகிறது.
ஆனால் உண்மையான தொழில் வளர்ச்சி:

•நீண்டகால discipline
•consistency
•patience
•continuous learning


இவைகளின் கூட்டுத்தொகை.

பல entrepreneurs ஆரம்பத்தில்:

•daily survival பற்றி சிந்திக்கிறார்கள்


பின்னர் மெதுவாக:

•business systems
•customer retention
•branding
•staff management
•expansion strategy

போன்ற professional thinking-க்கு மாறுகிறார்கள்.

இதுவே ஒரு “small activity”யை “real enterprise” ஆக மாற்றுகிறது.

ஆனால் இந்தப் பயணத்தில் மிகவும் ஆபத்தான தருணமும் வருகிறது — ஆரம்ப வெற்றிக்குப் பிறகான அலட்சியம்.

பல தொழில்கள்:
•growth வந்த பிறகு quality குறைகிறது
•customer service பாதிக்கப்படுகிறது
•financial discipline உடைகிறது
•unnecessary expansion நடக்கிறது

இதனால் நல்ல முயற்சிகளும் சில நேரங்களில் சிதறிவிடுகின்றன.

ஒரு business வளர வேண்டும் என்றால்:

•structure தேவை
•documentation தேவை
•systems தேவை
•vision தேவை

முக்கியமாக, entrepreneur தனது தொழிலோடு சேர்ந்து வளர வேண்டும்.

இன்று உலக சந்தை வேகமாக மாறுகிறது.

Customer expectations மாறுகின்றன.
Technology மாறுகிறது.
Marketing culture மாறுகிறது.
AI-driven economy உருவாகிறது.

இந்த சூழலில் small businesses survive செய்ய வேண்டுமெனில்:

•digital adaptation
•innovation
•customer experience
•product differentiation

இவைகள் மிகவும் முக்கியமானவை.

ஒரு entrepreneur இனி வெறும் உற்பத்தியாளர் மட்டும் அல்ல.
அவர்:
•marketer
•communicator
•strategist
•digital learner
•community builder

ஆகவும் மாற வேண்டிய காலம் இது.

இலங்கையின் எதிர்கால பொருளாதாரத்தில் மிகப்பெரிய சக்தி hidden industrial giants அல்ல.
அவை இன்று அமைதியாக வளர்ந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான சிறு தொழில்கள்தான்.

ஒரு village-based food producer.
ஒரு home-based tailoring unit.
ஒரு youth-led digital printing service.
ஒரு women-led handicraft business.

இவைகள்தான் நாளைய sustainable economy-யின் விதைகள்.

ஒரு சிறு முயற்சியை நாம் ஒருபோதும் சிறியதாக பார்க்கக்கூடாது.

ஏனெனில் சில நேரங்களில் ஒரு குடும்பத்தின் உயிர்வாழ்வுக்காக ஆரம்பிக்கப்பட்ட தொழில்,
பின்னர் ஒரு சமூகத்தின் வேலைவாய்ப்பு மையமாக மாறிவிடுகிறது.

— முடிவு —

Tuesday, 26 May 2026

“மூலதனம் இல்லாமல் தொடங்கிய தொழில்கள்”Part 04 — “Branding இல்லாத பொருட்கள்”

#முர்ஷித்

இலங்கையில் பல சிறந்த பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.
தரமும் இருக்கிறது.
சுவையும் இருக்கிறது.
உழைப்பும் இருக்கிறது.
ஆனால் அவற்றில் பல சந்தையில் தெரியாமல் மறைந்து போகின்றன.

ஏன்?

ஏனெனில் ஒரு நல்ல product மட்டும் போதாது.
அதை மக்கள் நினைவில் வைத்துக்கொள்ளும் ஒரு identity-யும் தேவை.

அதுதான் Branding.

Industrial Development Board of Ceylon இன் கள அனுபவங்களில் நான் அடிக்கடி கவனித்த ஒன்று —
பல சிறு தொழில் முனைவோர்:

•நல்ல பொருட்களை தயாரிக்கிறார்கள்
•customer satisfaction-ஐ கூட உருவாக்குகிறார்கள்

ஆனால்:

•பெயர் இல்லை
•logo இல்லை
•proper packaging இல்லை
•social media presence இல்லை
•brand story இல்லை

இதனால் அவர்கள் தயாரிப்புகள் சந்தையில் “generic products” ஆகவே மாறிவிடுகின்றன.

ஒரு customer supermarket-க்கு செல்லும்போது, அவர் product-ஐ மட்டும் வாங்குவதில்லை.

அவர்:

•நம்பிக்கை
•quality perception
•presentation
•emotional connection
இவைகளையும் வாங்குகிறார்.

இதனால் தான் branding என்பது luxury அல்ல.
அது survival strategy.

ஒரு சிறிய spices packet கூட:

•attractive label
•clear product information
•proper contact details
•clean packaging

இவைகளுடன் வந்தால் அதன் market value உடனே உயர்கிறது.

பல நேரங்களில் customer முதலில் product-ஐ பார்க்கவில்லை.
அவர் packaging-ஐ பார்க்கிறார்.

இதுதான் consumer psychology.

இன்று social media காலத்தில் branding இன்னும் முக்கியமாகிவிட்டது.

ஒரு சிறு தொழிலுக்கும் இன்று தேவை:

•ஒரு professional business name
•consistent logo
•Facebook page
•WhatsApp business profile
•simple product photography
•customer reviews
•digital visibility

இவை இல்லாமல் நல்ல products கூட crowd-இல் மறைந்து போகின்றன.

ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில், branding என்பது பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் அல்ல.

ஒரு வீட்டுத் தொழிலும்:

•தனது own identity உருவாக்கலாம்
•தனது story சொல்லலாம்
•தனது community உருவாக்கலாம்

ஏனெனில் மக்கள் இன்று products மட்டுமல்ல, stories-யையும் வாங்குகிறார்கள்.

ஒரு widow woman ஆரம்பித்த food business.
ஒரு village youth ஆரம்பித்த handicraft brand.
ஒரு family recipe-யை அடிப்படையாகக் கொண்ட traditional food product.

இவையெல்லாம் powerful brand stories ஆக மாற முடியும்.

ஆனால் இன்னும் பல entrepreneurs branding-ஐ unnecessary expense என்று நினைக்கிறார்கள்.

உண்மையில் branding என்பது:
•customer trust-க்கான முதலீடு
•market recognition-க்கான பாதை
•long-term growth-க்கான அடித்தளம்

ஒரு brand உருவான பிறகு:

•repeat customers உருவாகிறார்கள்
•market loyalty அதிகரிக்கிறது
•price value உயர்கிறது
•expansion opportunities கிடைக்கின்றன

அதாவது product ஒரு business-ஆக மாறுகிறது.

இன்று AI tools, Canva, smartphone photography போன்ற technology காரணமாக branding மிகவும் எளிதாகிவிட்டது.

ஒரு entrepreneur இன்று:

•low-cost logo உருவாக்கலாம்
•professional posters design செய்யலாம்
•online campaigns நடத்தலாம்
•digital catalog உருவாக்கலாம்

Technology இன்று பெரிய நிறுவனங்களுக்கான privilege மட்டும் இல்லை.
அது small entrepreneurs-க்கும் திறந்திருக்கிறது.

ஒரு பொருளை தயாரிப்பது தொழிலின் ஆரம்பம்.
ஆனால் அந்தப் பொருளுக்கு ஒரு முகம், ஒரு குரல், ஒரு அடையாளம் கொடுப்பதே — உண்மையான brand building.

சில நேரங்களில் சந்தையில் தோல்வியடைவது பொருளின் தரம் அல்ல.
அதன் தெரியாமையே.

(தொடரும்…)

Monday, 25 May 2026

“மூலதனம் இல்லாமல் தொடங்கிய தொழில்கள்”Part 03 — “சேமிப்பிலிருந்து முதலீடு வரை”

#முர்ஷித்

பல சிறு தொழில்களின் முதல் முதலீட்டாளர் —

ஒரு bank அல்ல.

ஒரு பெரிய நிறுவனம் அல்ல.

ஒரு venture capitalist கூட அல்ல.

அது ஒரு குடும்பத்தின் சிறிய சேமிப்பு.

கைத்தொழில் துறையின் கள அனுபவங்களில் நான் அடிக்கடி கண்ட உண்மை இதுதான் —


பல வெற்றிகரமான தொழில்கள் ஆரம்பிக்கப்பட்டது:

•தினசரி சேமிப்பில் இருந்து

•பெண்களின் சிட்டு சேமிப்பில் இருந்து

•நகை அடமானத்தில் இருந்து

•அல்லது குடும்ப உறுப்பினர்களின் நம்பிக்கையில் இருந்து


ஒரு மனிதன் தனது பல வருட savings-ஐ வைத்து ஒரு machine வாங்குகிறார்.

ஒரு தாய் தனது jewellery-ஐ அடமானம் வைத்து மகனின் தொழிலை ஆரம்பிக்க உதவுகிறார்.

ஒரு குடும்பம் தனது தேவைகளை குறைத்து ஒரு small production setup உருவாக்குகிறது.

இவை வெறும் financial decisions அல்ல.

இவை நம்பிக்கையின் முதலீடுகள்.

சிறு தொழில்களின் ஆரம்ப கட்டத்தில் “micro capital” மிக முக்கியமானது.

அதாவது:

•சிறிய தொகைகள்

•குறைந்த risk

•மெதுவான வளர்ச்சி

•controlled expansion

இந்த முறை பல குடும்பங்களுக்கு பாதுகாப்பான தொழில் வளர்ச்சி பாதையாக அமைகிறது.

ஆனால் இங்கே ஒரு முக்கியமான தவறு பல இடங்களில் நடக்கிறது.

பலர்:

•business capital

•personal expenses

•family spending

இவற்றை எல்லாம் ஒன்றாகக் கலக்கத் தொடங்குகிறார்கள்.

இதுவே பல சிறு தொழில்களின் முதல் financial collapse.

ஒரு தொழில் ஆரம்பித்தவுடன்:

•daily sales

•profit

•raw material cost

•operational expenses

•reinvestment

இவைகளை தெளிவாகப் பதிவு செய்ய வேண்டும்.

சிறிய தொழிலாக இருந்தாலும்:

‌•கணக்குப்பதிவு

•cash flow management

•budgeting

•savings discipline

இவைகள் இல்லாமல் growth sustainable ஆகாது.

பல நேரங்களில் நான் பார்த்திருக்கிறேன் 

நல்ல products இருந்தும் தொழில்கள் மூடப்படுகின்றன.

காரணம் product quality அல்ல.

Financial discipline இல்லாமை.

ஒரு முக்கியமான entrepreneurial lesson என்னவெனில்:

“வருமானம் கிடைப்பது மட்டும் வெற்றி அல்ல;

அதை நிர்வகிக்கத் தெரிந்திருப்பதே உண்மையான வெற்றி.”

இன்று financial literacy என்பது மிக முக்கியமான திறன்.

குறிப்பாக small entrepreneurs:

•banking system-ஐ புரிந்துகொள்ள வேண்டும்

•digital payments பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்

•savings culture உருவாக்க வேண்டும்

•unnecessary debt-ஐ தவிர்க்க வேண்டும்

ஏனெனில் கடன் சில நேரங்களில் வளர்ச்சிக்கான கருவி.

ஆனால் தவறாக பயன்படுத்தினால் அது தொழிலை விழுங்கும் அமைதியான அழுத்தமாக மாறிவிடும்.

இதோ இன்னொரு முக்கியமான மாற்றம்.

முன்பு சேமிப்பு என்பது வெறும் பாதுகாப்பு.

ஆனால் இன்று smart reinvestment தான் வளர்ச்சியின் அடித்தளம்.

ஒரு entrepreneur:

•profit முழுவதையும் செலவழிக்காமல்

•ஒரு பகுதியை reinvest செய்ய வேண்டும்

•tools upgrade செய்ய வேண்டும்

•packaging மேம்படுத்த வேண்டும்

•digital marketing-இல் முதலீடு செய்ய வேண்டும்

இவ்வாறே சிறு தொழில்கள் மெதுவாக professional businesses ஆக மாறுகின்றன.

ஒரு சிறிய சேமிப்பு கூட சரியான திசையில் பயன்படுத்தப்பட்டால்:

•ஒரு machine ஆக மாறலாம்

•ஒரு brand ஆக மாறலாம்

•ஒரு factory ஆக மாறலாம்

•சில நேரங்களில் ஒரு தலைமுறையின் பொருளாதார பாதுகாப்பாக மாறலாம்

சில குடும்பங்கள் பணத்தை மட்டும் சேமிக்கின்றன.

சில குடும்பங்கள் அந்தச் சேமிப்பை எதிர்காலமாக மாற்றுகின்றன.

அதுவே entrepreneurship-இன் அமைதியான வித்தியாசம்.


(தொடரும்…)

Sunday, 24 May 2026

மனிதனின் உள்ளம்..

#முர்ஷித் 

மனிதனின் உள்ளம் கடலைப் போன்றது.

அலைகள் மட்டுமே கண்ணுக்குத் தெரிகின்றன —
சினமாக உயர்கின்றன, சோர்வாக தாழ்கின்றன,
கரையில் நிற்பவர்களை வியக்க வைக்கின்றன.
ஆனால் கடலின் உண்மை
அதன் மேற்பரப்பில் இல்லை.

ஆழத்தில் தான் ஒளி புகாத இடங்களில்
வண்ணமிழந்த பவளங்களும்,
பெயரிடப்படாத உயிரினங்களும்,
யாரும் தொடாத பொக்கிஷங்களும் தூங்குகின்றன.

அந்த ஆழம் தான் அவன் உண்மையான அடையாளம் 
அவன் காயங்கள், அவன் கனவுகள்,
அவன் யாரிடமும் சொல்லாத தனிமை,
அவன் வார்த்தைகளுக்கு வராத அன்பு.

ஆனால் மனிதன்
தன் அலைகளையே கண்ணாடியாக வைத்துக்கொண்டு
தன்னையே புரிந்துகொண்டதாக நம்புகிறான்.

உள்ளே இறங்க பயப்படுகிறான் 
ஏனென்றால் ஆழத்தில் இறங்குவது
இருளை சந்திப்பது மட்டுமல்ல,
தன்னையே சந்திப்பதும் தான்.

தன்னை அறிவதை நாளை செய்யலாம் என்று
ஒத்திப்போடும் போதெல்லாம்,
கடல் சற்று அமைதியாகிறது.

அமைதி என்பது காலி இல்லை 
அது நிரம்பிய மௌனம்.

ஆனால் அவன் கேட்பதில்லை.

இப்படியே,

அலைகளை எண்ணிக்கொண்டே,
ஆழத்தை தொடாமலே,

வாழ்க்கையும் தீர்ந்து விடுகிறது.

சில மனிதர்களின் முழு வாழ்க்கையும்
தங்களுக்கே அறிமுகமாகாமல் கடந்து போகிறது.

அதுதான் உலகின் மிகப்பெரிய தனிமை.

#Motivation #Inspiration #ThoughtOfTheDay #LifeQuotes #DailyWisdom #ExplorePage #Reels #viralquotes

Saturday, 23 May 2026

“மூலதனம் இல்லாமல் தொடங்கிய தொழில்கள்”Part 02 — “வீட்டிலிருந்து ஆரம்பித்த தொழில்கள்”

#முர்ஷித் 

இலங்கையின் பல வெற்றிகரமான சிறு தொழில்களின் முதல் முகவரி —
ஒரு வீடு.
அது பெரிய factory அல்ல.
Industrial zone அல்ல.
Corporate office அல்ல.

ஒரு சிறிய சமையலறை.
ஒரு veranda.
ஒரு bedroom corner.
அல்லது வீட்டின் முன்பகுதியில் வைக்கப்பட்ட ஒரு table.

ஆனால் அங்கேதான் பல குடும்பங்களின் எதிர்காலம் மெதுவாக உருவாகத் தொடங்கியது.

Industrial Development Board of Ceylon உடன் பணியாற்றிய காலங்களில், வீட்டிலிருந்து ஆரம்பித்த நூற்றுக்கணக்கான தொழில்களை நான் நேரில் கண்டிருக்கிறேன்.
அவற்றில் பல:

•food production
•tailoring
•handicrafts
•beauty products
•printing services
•digital services
•home baking
•spices and traditional foods

போன்ற துறைகளில் இருந்தன.

அவற்றின் ஆரம்பம் மிகவும் சாதாரணமாக இருந்தது.
ஆனால் அந்தச் சாதாரண ஆரம்பங்களுக்குப் பின்னால் இருந்த மன உறுதி — அசாதாரணமானது.

வீட்டிலிருந்து தொழில் ஆரம்பிப்பதற்கான மிகப்பெரிய பலம் என்னவெனில்:

•குறைந்த செலவு
•குடும்ப ஆதரவு
•flexible working environment
•risk reduction

பல குடும்பங்களுக்கு இது மிகவும் பாதுகாப்பான ஆரம்ப முறை.

ஏனெனில் ஆரம்பத்தில்:

•shop rent இல்லை
•பெரிய staff தேவையில்லை
•transport செலவு குறைவு
•operational expenses குறைவு

இதனால் சிறிய முதலீட்டிலேயே முயற்சி செய்ய முடிகிறது.

ஆனால் வீட்டிலிருந்து தொழில் செய்வது எளிது என்று நினைப்பது தவறு.

அதற்கும் தனித்த சவால்கள் உள்ளன:

•space limitation
•குடும்ப பொறுப்புகள் மற்றும் தொழில் சமநிலை
•customer trust உருவாக்கல்
•professionalism maintain செய்தல்
•time management

இவற்றை சரியாக நிர்வகிக்காதால், பல நல்ல முயற்சிகளும் மெதுவாக சோர்வடைகின்றன.

ஆனால் இன்று digital tools இந்த பிரச்சினைகளில் பலவற்றை மாற்றிவருகின்றன.

ஒரு வீட்டுத் தொழிலும் இன்று:

•Facebook மூலம் branding செய்ய முடியும்
•WhatsApp மூலம் orders பெற முடியும்
•Google Maps மூலம் visibility பெற முடியும்
•TikTok மூலம் customer reach அதிகரிக்க முடியும்
•online payment பெற முடியும்

முன்பு வீட்டுத் தொழில்கள் local market-க்குள் மட்டுமே இருந்தன.
இப்போது அவை national market-ஐ கூட அடைய முடிகிறது.

இதுதான் technology-யின் ஜனநாயக சக்தி.

இன்று ஒரு கிராமத்தில் இருக்கும் பெண் entrepreneur கூட:

•Colombo customer-க்கு விற்க முடியும்
•online delivery செய்ய முடியும்
•தனது brand identity உருவாக்க முடியும்

இது சில ஆண்டுகளுக்கு முன்பு கற்பனைக்கூட செய்ய முடியாத மாற்றம்.

ஆனால் இன்னும் ஒரு முக்கியமான விஷயம் உள்ளது.

பல வீட்டுத் தொழில்கள் “business” போல நடத்தப்படுவதில்லை.
அவை இன்னும் “side income activity” என்ற மனநிலையில்தான் இருக்கின்றன.

இதனால்:

•proper record keeping இல்லாமல் போகிறது
•pricing mistakes நடக்கின்றன
•profit தெரியாமல் போகிறது
•growth planning உருவாகவில்லை

ஒரு வீட்டுத் தொழிலும்:

•ஒரு brand ஆக மாற முடியும்
•ஒரு registered business ஆக வளர முடியும்
•employment உருவாக்க முடியும்

என்பதை புரிந்துகொள்ள வேண்டிய காலம் இது.

சிறு ஆரம்பங்களை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது.

இன்று உலகின் பல global brands கூட:

garage-இல்
bedroom-இல்
kitchen table-இல்

ஆரம்பிக்கப்பட்டவை.

ஒரு வீட்டிலிருந்து ஆரம்பித்த தொழில்,
சில நேரங்களில் அந்த வீட்டின் சுவர்களைத் தாண்டி ஒரு சமூகத்தின் பொருளாதார வரைபடத்தையே மாற்றிவிடுகிறது.

(தொடரும்…)

Thursday, 21 May 2026

“மூலதனம் இல்லாமல் தொடங்கிய தொழில்கள்”Part 01 — “பணமில்லாத கனவுகள்”

#முர்ஷித்

“என்னிடம் முதலீடு இல்லை... அதனால் தொழில் ஆரம்பிக்க முடியவில்லை.”

களத்தில் நான் அதிகமாகக் கேட்ட வாக்கியங்களில் இதுவும் ஒன்று.

ஆனால் வாழ்க்கையின் மிக ஆழமான உண்மை என்னவெனில் —
பல பெரிய தொழில்கள் பணத்திலிருந்து பிறக்கவில்லை.
அவை அவசியத்திலிருந்து பிறந்தவை.
Industrial Development Board of Ceylon உடன் பணியாற்றிய ஆண்டுகளில், நான் சந்தித்த பல வெற்றிகரமான சிறு தொழில் முனைவோர்கள் ஆரம்பத்தில்:

•பெரிய capital இல்லாதவர்கள்
•bank balance இல்லாதவர்கள்
•business background இல்லாதவர்கள்
•சில நேரங்களில் formal education கூட இல்லாதவர்கள்

ஆனால் அவர்களிடம் இருந்த ஒன்று —
“வாழ்க்கையை மாற்ற வேண்டும்” என்ற உள்ளார்ந்த தீ.

ஒருவர் தனது வீட்டின் முன்பகுதியில் வெறும் ஐநூறு ரூபாயுடன் Sweet Production and Business ஆரம்பித்தார்.
ஒருவர் இரண்டாயிரம் ரூபாயுடன் snacks business ஆரம்பித்தார்.
மற்றொருவர் borrowed sewing machine ஒன்றுடன் tailoring ஆரம்பித்தார்.
ஒரு இளைஞன் second-hand computer ஒன்றைப் பயன்படுத்தி graphic design service தொடங்கினார்.

அவர்களிடம் பெரிய office இல்லை.
Air-conditioned workspace இல்லை.
Corporate branding இல்லை.

ஆனால் அவர்களிடம் இருந்தது:

•முயற்சி
•பொறுமை
•consistency
•தோல்வியை ஏற்கும் மனநிலை

இன்றைய உலகில் பலர் entrepreneurship-ஐ social media glamour மூலமாக பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
Luxury office, expensive setup, instant success போன்ற தோற்றங்கள் உண்மையான தொழில் உலகத்தை மறைக்கின்றன.

உண்மையில் சிறு தொழில்களின் ஆரம்பம் பெரும்பாலும் மிகவும் அமைதியானது.

ஒரு சமையலறை.
ஒரு சிறிய table.
ஒரு borrowed machine.
ஒரு second-hand tool.

ஆனால் சில நேரங்களில் அதுவே ஒரு குடும்பத்தின் பொருளாதார மறுபிறப்பாக மாறுகிறது.

மூலதனம் முக்கியமல்ல என்று சொல்ல முடியாது.
அது முக்கியம்.
ஆனால் ஆரம்ப கட்டத்தில் capital-ஐவிட முக்கியமானவை:

•சரியான idea
•market understanding
•customer trust
•discipline
•adaptability

பல தொழில்கள் பெரிய முதலீட்டுடன் ஆரம்பித்து மூடப்படுகின்றன.
சில தொழில்கள் மிகச் சிறிய முதலீட்டுடன் ஆரம்பித்து வளர்கின்றன.

ஏன்?

ஏனெனில் தொழிலை வளர்ப்பது பணம் மட்டும் அல்ல.
அது mindset.

பல இளைஞர்கள் ஆரம்பத்திலேயே:

•பெரிய building
•பெரிய machine
•பெரிய investment

இவற்றைப் பற்றியே சிந்திக்கிறார்கள்.

ஆனால் entrepreneurship-இன் முதல் பாடம்

“Start where you are, with what you have.”

இன்று digital economy ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

முன்பு ஒரு தொழிலை ஆரம்பிக்க:

•shop தேவைப்பட்டது
•பெரிய inventory தேவைப்பட்டது
•physical marketing தேவைப்பட்டது

ஆனால் இன்று:

•Facebook page போதும்
•WhatsApp catalog போதும்
•Canva design போதும்
•TikTok visibility போதும்

ஒரு smartphone கூட ஒரு business tool ஆக மாறிவிட்டது.

இதனால் “மூலதனம் இல்லை” என்பது முழுமையான தடையாக இல்லை.
ஆனால் இன்னும் ஒரு முக்கியமான சவால் இருக்கிறது — பயம்.

பலர் தோல்வியைப் பயப்படுகிறார்கள்.
சமூக விமர்சனத்தைப் பயப்படுகிறார்கள்.
“முடியவில்லை என்றால் என்ன ஆகும்?” என்று சிந்திக்கிறார்கள்.

ஆனால் ஒரு கேள்வி கேட்க வேண்டும்.

முயற்சி செய்யாமல் வாழ்ந்த வாழ்க்கை உண்மையில் பாதுகாப்பானதா?

இன்று உலகம் வேகமாக மாறுகிறது.
Traditional jobs குறைகின்றன.
Automation அதிகரிக்கிறது.
AI-driven economy உருவாகிறது.

இந்த புதிய உலகத்தில்:

•creativity
•innovation
•entrepreneurship
•adaptability

இவைகள்தான் எதிர்கால பாதுகாப்பு.

சில நேரங்களில் மிகப் பெரிய தொழில்களின் முதல் முதலீடு
ஒரு மனிதனின் கடைசி நம்பிக்கையாகவே இருக்கும்.

(தொடரும்…)

ஒரு சிறு தொழில் எப்படி ஒரு குடும்பத்தை மாற்றுகிறது?Part 05 — “ஒரு தலைமுறையை மாற்றிய தொழில்”

#முர்ஷித் 

ஒரு சிறு தொழிலின் உண்மையான வெற்றி, அதன் தினசரி விற்பனையில் மட்டும் அளவிடப்படுவதில்லை.
அது அடுத்த தலைமுறையின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றத்தில்தான் அதன் மிகப்பெரிய அர்த்தம் இருக்கிறது.
கைத்தொழில் துறையில் பணியாற்றிய பல ஆண்டுகளில், நான் எண்ணற்ற குடும்பங்களின் வாழ்க்கைப் பயணங்களை பார்த்திருக்கிறேன்.

ஆரம்பத்தில்:

•ஒரு சிறிய வீட்டுத் தொழில்
•மிகக் குறைந்த முதலீடு
•உறவினர்களின் சந்தேக பார்வை
•சந்தைக்கு செல்லும் பயம்

இவற்றோடு ஆரம்பித்த பல குடும்பங்கள், சில ஆண்டுகளுக்குப் பிறகு முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கை நிலைக்கு சென்றிருந்தன.

ஏன்?

ஏனெனில் ஒரு தொழில் நிலைத்திருக்கத் தொடங்கும் போது, அதன் தாக்கம் “இன்றைய உணவு”வைத் தாண்டி “நாளைய எதிர்காலம்” வரை செல்லத் தொடங்குகிறது.

முதலில் மாற்றமடைவது குழந்தைகளின் வாழ்க்கை.

முன்பு:

•பள்ளிக் கட்டணம் தாமதமானது
•tuition நிறுத்தப்பட்டது
•புத்தகங்கள் வாங்க முடியவில்லை
•உயர் கல்வி ஒரு கனவாக இருந்தது

ஆனால் மெதுவாக:

•குழந்தைகள் நல்ல கல்வி பெறத் தொடங்குகிறார்கள்
•digital learning கிடைக்கிறது
•university செல்லும் வாய்ப்புகள் உருவாகின்றன
•தொழில்முறை உலகத்தை அடையும் தைரியம் உருவாகிறது

ஒரு சிறு தொழில் சில நேரங்களில் ஒரு குடும்பத்தின் “வறுமை மரபை” உடைக்கிறது.

இதுவே intergenerational economic transformation.

ஒரு தலைமுறை துன்பப்பட்டாலும், அடுத்த தலைமுறை உயர வேண்டும் என்ற ஆசைதான் பல சிறு தொழில்களின் பின்னாலுள்ள மிகப்பெரிய சக்தி.

ஒரு தாய் தனது மகளுக்காக தொழில் செய்கிறார்.
ஒரு தந்தை தனது மகனின் கல்விக்காக இரவு பகலாக உழைக்கிறார்.
ஒரு குடும்பம் தனது அடுத்த தலைமுறை “நாம் சந்தித்த கஷ்டத்தை சந்திக்கக் கூடாது” என்று போராடுகிறது.

இதுதான் சிறு தொழில்களின் அமைதியான தத்துவம்.

ஆனால் இன்று உலகம் வேகமாக மாறுகிறது.

இனி அடுத்த தலைமுறையை மாற்ற வேண்டுமெனில்:

•கல்வி மட்டும் போதாது
•தொழில்நுட்ப திறனும் தேவை
•innovation mindset-மும் தேவை
•entrepreneurship culture-மும் தேவை

எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் மாறிக்கொண்டே போகும்.
AI, automation, digital economy, remote work போன்ற மாற்றங்கள் உலக பொருளாதாரத்தை மறுபரிசீலனை செய்கின்றன.

இந்த சூழலில், சிறு தொழில்களை வெறும் survival mechanism ஆக பார்க்க முடியாது.
அவை எதிர்கால adaptability-க்கான training ground ஆக மாறுகின்றன.

ஒரு வீட்டில் தொழில் சூழல் இருக்கும் போது:

•குழந்தைகள் creativity கற்கிறார்கள்
•problem solving கற்கிறார்கள்
•customer interaction கற்கிறார்கள்
•financial responsibility கற்கிறார்கள்

அதாவது, அந்த வீடு தானாகவே ஒரு informal business school ஆக மாறுகிறது.

இதனால் தான் உலகின் பல வெற்றிகரமான entrepreneurs, சிறு வணிக பின்னணியிலிருந்து வந்தவர்கள்.

இலங்கையின் எதிர்கால பொருளாதாரத்தையும் நாம் இதே பார்வையில் பார்க்க வேண்டும்.

பெரிய முதலீடுகள் மட்டும் ஒரு நாட்டை முன்னேற்றாது.
அதன்:

•கிராமிய உற்பத்தி
•பெண்கள் தொழில் முனைவு
•இளைஞர் innovation
•குடும்ப அடிப்படையிலான சிறு தொழில்கள்

இவைகள்தான் நிலையான பொருளாதார அடித்தளத்தை உருவாக்கும்.

ஒரு சிறு தொழில் சில நேரங்களில் ஒரு வீட்டின் செலவுகளை மட்டுமல்ல,
ஒரு தலைமுறையின் விதியையே மாற்றிவிடுகிறது.

— முடிவு —

#AILiteracy #SkillDevelopment #Entrepreneurship #AIForCommunities

Wednesday, 20 May 2026

ஒரு சிறு தொழில் எப்படி ஒரு குடும்பத்தை மாற்றுகிறது?Part 04 — “சிறு தொழிலின் சமூக தாக்கம்”

#முர்ஷித்
ஒரு சிறு தொழிலை நாம் பெரும்பாலும் ஒரு தனிப்பட்ட வருமான முயற்சியாக மட்டுமே பார்க்கிறோம்.
ஆனால் உண்மையில், ஒவ்வொரு சிறு தொழிலும் ஒரு சமூகத்தின் பொருளாதார இதயத் துடிப்பாக இருக்கிறது.
ஒரு கிராமத்தில் ஒரு சிறிய food production unit ஆரம்பிக்கப்படும்போது,
அது ஒரே ஒருவருக்கான வருமானத்தை மட்டும் உருவாக்குவதில்லை.

அதன் பின்னால் மெதுவாக உருவாகத் தொடங்குவது:

•புதிய வேலைவாய்ப்புகள்
•உள்ளூர் மூலப்பொருள் சந்தை
•போக்குவரத்து தேவைகள்
•packaging சேவைகள்
•printing தேவைகள்
•digital marketing வாய்ப்புகள்
•retail network

அதாவது, ஒரு சிறு தொழில் மற்ற பல சிறு பொருளாதார வட்டங்களை உயிர்ப்பிக்கிறது.

Industrial Development Board of Ceylon இன் கள அனுபவங்களில் நான் மீண்டும் மீண்டும் கண்ட உண்மை இதுதான் —
ஒரு சிறு தொழில் வெற்றி பெறும் போது, அதன் தாக்கம் அந்த தொழில் உரிமையாளரின் வீட்டைத் தாண்டி முழு சமூகத்திற்கும் பரவுகிறது.

ஒரு tailoring centre ஆரம்பிக்கப்படுகிறது.
சில மாதங்களில்:

•இரண்டு பெண்களுக்கு வேலை கிடைக்கிறது
•துணி விற்பனை அதிகரிக்கிறது
•nearby shops-களில் customer traffic கூடுகிறது

ஒரு food processing business ஆரம்பிக்கப்படுகிறது.
பின்னர்:

•local farmers-க்கு புதிய சந்தை உருவாகிறது
•delivery வேலைகள் உருவாகின்றன
•packaging suppliers-க்கு வருமானம் கிடைக்கிறது

இதுதான் local economic circulation.

பெரிய நகரங்களில் மட்டும் பொருளாதாரம் சுழலும்போது, கிராமங்கள் மெதுவாக வறுமைக்குள் தள்ளப்படுகின்றன.
ஆனால் கிராமங்களில் சிறு தொழில்கள் வளரும்போது, அந்தப் பணப்புழக்கம் உள்ளூரிலேயே நிலைத்திருக்கிறது.

அதனால் தான் பல முன்னேற்ற நாடுகள்:

•SMEs
•Cottage industries
•Rural enterprises
•Women-led businesses

போன்ற துறைகளுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் அளிக்கின்றன.

ஏனெனில் சிறு தொழில்கள்:

•inclusive economy உருவாக்குகின்றன
•wealth distribution-ஐ சமநிலைப்படுத்துகின்றன
•migration-ஐ குறைக்கின்றன
•சமூக நிலைத்தன்மையை அதிகரிக்கின்றன

ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில், சிறு தொழில்கள் சமூகத்தில் “மரியாதையான வாழ்வாதார கலாசாரத்தையும்” உருவாக்குகின்றன.

வேலை இல்லாமல் இருக்கும் ஒரு இளைஞன்:

•மனஅழுத்தத்தில் சிக்கக்கூடும்
•சமூக விரக்தியில் வாழக்கூடும்
•சில நேரங்களில் தவறான பாதைகளிலும் செல்லக்கூடும்

ஆனால் ஒரு தொழில்:

•அவருக்கு அடையாளம் தருகிறது
•பொறுப்புணர்வு தருகிறது
•எதிர்கால நம்பிக்கை தருகிறது

இதுவே சமூக அமைதிக்கான அடித்தளம்.

இன்று நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று — “வளர்ச்சி சமநிலையின்மை”.

சில நகரங்கள் மட்டும் வளர்கின்றன.
ஆனால் பல கிராமங்கள் இன்னும்:

•வேலைவாய்ப்பு பற்றாக்குறை
•சந்தை அணுகல் குறைபாடு
•தொழில்நுட்ப பின்தங்கல்
•பொருளாதார நிச்சயமின்மை

போன்ற பிரச்சினைகளுடன் வாழ்கின்றன.

இந்த இடைவெளியை குறைக்கக்கூடிய மிக வலிமையான கருவிகளில் ஒன்று — சிறு தொழில் வளர்ச்சி.

அதற்காக தேவையானவை:

•பயிற்சி
•தொழில்நுட்ப ஆதரவு
•digital literacy
•market linkage
•branding awareness
•financial access
•policy consistency

இவை அனைத்தும் ஒருங்கிணைந்தால் மட்டுமே, சிறு தொழில்கள் நீடித்த சமூக மாற்றமாக மாறும்.

ஒரு நாடு உயரமான கட்டிடங்களால் மட்டுமே வளர்ந்த நாடாக மாறாது.
அதன் கிராமங்களிலும் உற்பத்தி ஒலிக்க வேண்டும்.
அதன் வீடுகளிலும் தொழில் கனவுகள் விழிக்க வேண்டும்.

ஏனெனில் ஒரு சிறு தொழில் உருவாகும் போது,
ஒரு குடும்பம் மட்டுமல்ல — ஒரு சமூகமும் மெதுவாக உயிர் பெறத் தொடங்குகிறது.

(தொடரும்…)

Tuesday, 19 May 2026

ஒரு சிறு தொழில் எப்படி ஒரு குடும்பத்தை மாற்றுகிறது?Part 03 — “பெண்களும் குடும்ப பொருளாதாரமும்”

#முர்ஷித்

ஒரு நாட்டின் பொருளாதாரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், அதன் சந்தைகளை மட்டும் பார்க்கக் கூடாது.
அதன் சமையலறைகளையும் பார்க்க வேண்டும்.
ஏனெனில் இலங்கையின் பல சிறு தொழில்களின் பிறப்பிடம் — இன்னும் ஒரு பெண்ணின் சமையலறைதான்.

கைத்தொழில் துறையில் பணியாற்றிய காலங்களில், நான் சந்தித்த மிக வலிமையான தொழில் முனைவோர்களில் பலர் பெண்கள்தான்.
அவர்கள் பெரிய அலுவலகங்களில் இருந்தவர்கள் அல்ல.

பலர்:

•வீட்டுத்தாய்மார்கள்
•single mothers
•கணவரின் வருமானம் போதாத குடும்பங்களின் பெண்கள்
•அல்லது வாழ்க்கையால் கட்டாயப்படுத்தப்பட்ட போராளிகள்

ஆனால் அவர்களிடம் இருந்த ஒன்று — “என் குடும்பம் விழக்கூடாது” என்ற உறுதி.

ஒரு பெண் வீட்டிலிருந்து pickle தயாரிக்க ஆரம்பிக்கிறார்.
மற்றொருவர் tailoring செய்கிறார்.
யாரோ ஒருவர் snacks தயாரிக்கிறார்.
மற்றொருவர் beauty products உருவாக்குகிறார்.

ஆரம்பத்தில் இவை “சிறிய வேலை” என்று சமூகத்தால் பார்க்கப்படலாம்.
ஆனால் உண்மையில் இவை:

•குடும்பத்தை தாங்கும் பொருளாதார தூண்கள்
•குழந்தைகளின் கல்விக்கான மறைமுக முதலீடுகள்
•பெண்களின் சுயமரியாதைக்கான அமைதியான புரட்சிகள்

ஒரு பெண் தனது சொந்த வருமானத்தை சம்பாதிக்கும் தருணம் —
அது வெறும் பணம் சம்பாதிப்பது அல்ல.
அது “என்னாலும் முடியும்” என்ற உள்ளார்ந்த அறிவிப்பு.

பல குடும்பங்களில் நான் கவனித்த ஒரு முக்கியமான மாற்றம் என்னவெனில், பெண் தொழில் முனைவோர் உருவான பிறகு:

•குழந்தைகளின் கல்வி மேம்படுகிறது
•குடும்ப சேமிப்பு அதிகரிக்கிறது
•வீட்டின் பொருளாதார திட்டமிடல் ஒழுங்காகிறது
•குடும்பத்தின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை உருவாகிறது

ஏனெனில் பெண்கள் சம்பாதிக்கும் வருமானம் பெரும்பாலும் குடும்பத்தின் அடிப்படை தேவைகளுக்கே செலவிடப்படுகிறது.

ஆனால் பெண்கள் தொழில் முனைவோராக மாறும் பாதை எளிதானதல்ல.

அவர்கள் இன்னும் பல மறைமுக தடைகளை எதிர்கொள்கிறார்கள்:

•“இது பெண்கள் செய்யும் வேலைதானா?” என்ற சமூக மனநிலை
•குடும்ப பொறுப்புகளும் தொழிலும் இடையிலான சமநிலை
•சந்தை அணுகல் குறைபாடு
•டிஜிட்டல் அறிவின்மை
•நிதி ஆதரவு பற்றாக்குறை

இவை பல பெண்களின் வளர்ச்சியை மெதுவாக்குகின்றன.

ஆனால் உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது.

இன்று ஒரு smartphone மற்றும் internet connection இருந்தாலே:

•வீட்டிலிருந்து online business நடத்த முடியும்
•Facebook page உருவாக்க முடியும்
•WhatsApp orders பெற முடியும்
•TikTok marketing செய்ய முடியும்
•island-wide delivery செய்ய முடியும்

இதுதான் digital economy-யின் புதிய சக்தி.

முன்பு பெண்கள் சந்தைக்கு செல்ல வேண்டியிருந்தது.
இப்போது சந்தையே பெண்களின் வீட்டுக்குள் வருகிறது.

இந்த மாற்றத்தை சரியாகப் பயன்படுத்தினால், இலங்கையின் கிராமிய பெண்கள் அடுத்த பொருளாதார மாற்றத்தின் மைய சக்தியாக மாறக்கூடும்.

ஒரு பெண் தொழில் முனைவோர் உருவாகும் போது,
ஒரு குடும்பம் மட்டும் மாறுவதில்லை.

அந்த வீட்டில் வளர்ந்த குழந்தைகள்:

•தன்னம்பிக்கையை கற்கிறார்கள்
•உழைப்பின் மதிப்பை புரிந்துகொள்கிறார்கள்
•பெண்களின் பொருளாதார சக்தியை நேரில் காண்கிறார்கள்

இதனால் ஒரு புதிய சமூக மனநிலையும் உருவாகிறது.

சில நேரங்களில் ஒரு நாட்டின் மிகப்பெரிய பொருளாதார மாற்றங்கள்,
அமைதியாக ஒரு சமையலறையில் ஆரம்பிக்கின்றன.

(தொடரும்…)

Sunday, 17 May 2026

ஒரு சிறு தொழில் எப்படி ஒரு குடும்பத்தை மாற்றுகிறது? Part 02 — “முதல் வருமானத்தின் மகிழ்ச்சி”

#முரிஷித்
ஒரு சிறு தொழிலின் முதல் வருமானம் என்பது வெறும் பணம் அல்ல.

அது ஒரு குடும்பத்தின் நீண்ட இருளுக்குப் பிறகு திறக்கும் முதல் ஜன்னல்.

பலர் பெரிய நிறுவனங்களின் வெற்றிக் கதைகளைப் பேசுகிறார்கள்.

ஆனால் நான் களத்தில் கண்ட மிக அழகான பொருளாதார தருணங்கள், ஒரு சிறு தொழில் முனைவோரின் “முதல் விற்பனை”யில்தான் இருந்தன.

Industrial Development Board of Ceylon இல் சேவை செய்த காலங்களில், நான் பல தொழில் முனைவோர்களின் ஆரம்ப நாட்களை பார்த்திருக்கிறேன்.
ஒருவர் தனது முதல் order கிடைத்த நாள் அழுதார்.

மற்றொருவர் தனது தயாரிப்பை யாரோ ஒருவர் பணம் கொடுத்து வாங்கியபோது, “இப்போ நான் யாரிடமும் கையை நீட்ட வேண்டியதில்லை” என்றார்.

அந்தச் சொற்கள் இன்னும் மனதில் ஒலிக்கின்றன.
ஏனெனில் ஒரு தொழிலின் முதல் வருமானம்:
•சுய மரியாதையின் முதல் சம்பளம்
•தன்னம்பிக்கையின் முதல் சான்று
•குடும்ப நம்பிக்கையின் முதல் ஒளி
பல குடும்பங்களில் இந்த மாற்றம் மிகவும் அமைதியாக நிகழ்கிறது.

முன்பு:
•கடன் கேட்டு வாழ்ந்தவர்கள்
•மாத இறுதியில் பயந்தவர்கள்
•குழந்தைகளின் தேவைகளை ஒத்திவைத்தவர்கள்

பின்னர் மெதுவாக:
•தினசரி செலவுகளை நிர்வகிக்கத் தொடங்குகிறார்கள்
•சேமிக்க ஆரம்பிக்கிறார்கள்
•குழந்தைகளின் கல்வியில் முதலீடு செய்கிறார்கள்
•வீட்டில் மனஅழுத்தம் குறைகிறது
இதுதான் சிறு தொழில்களின் உண்மையான சக்தி.

ஒரு தொழில் வெறும் income generation அல்ல.

அது emotional stability-யையும் உருவாக்குகிறது.

ஒரு குடும்பத்தில் வருமானம் இல்லாத காலங்களில்:
•சண்டைகள் அதிகரிக்கும்
•நம்பிக்கை குறையும்
•உறவுகள் சோர்வடையும்

ஆனால் ஒரு சிறு வருமானம்கூட அந்த வீட்டின் மனநிலையை மாற்றிவிடும்.

இதனால் தான் உலகின் பல முன்னேற்ற நாடுகள் “Small and Medium Enterprises (SMEs)” துறையை பொருளாதாரத்தின் backbone என அழைக்கின்றன.

சிறு தொழில்கள்:
•அதிக வேலைவாய்ப்பை உருவாக்குகின்றன
•பெண்களை பொருளாதாரத்தில் இணைக்கின்றன
•உள்ளூர் வளங்களை பயன்படுத்துகின்றன
•கிராமிய பொருளாதாரத்தை உயிர்ப்பிக்கின்றன

ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு உண்மை இருக்கிறது.

பல சிறு தொழில்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. ஆனால் எல்லா தொழில்களும் வளரவில்லை.

ஏன்?
ஏனெனில் ஆரம்ப வெற்றிக்குப் பிறகு:
•financial discipline இல்லாமை
•சந்தை புரிதல் குறைபாடு
•branding பற்றிய அறிவின்மை
•customer relationship management இல்லாமை
போன்ற காரணங்கள் தொழில்களை மெதுவாக பாதிக்கத் தொடங்குகின்றன.

அதனால் ஒரு தொழிலை ஆரம்பிப்பது முக்கியம்.
ஆனால் அதைவிட முக்கியமானது — அதை நிலைத்திருக்கச் செய்வது.

இன்று social media காலம்.

ஒரு சிறிய வீட்டுத் தொழிலும்:
•Facebook மூலம் சந்தையை அடையலாம்
•WhatsApp மூலம் வாடிக்கையாளர்களை உருவாக்கலாம்
•TikTok மூலம் brand visibility பெறலாம்
•Online delivery மூலம் நகரங்களைத் தாண்டி செல்லலாம்

முன்பு சந்தைக்கு செல்ல வேண்டியிருந்தது.
இப்போது சந்தையே கைகளில் வருகிறது.
இந்த மாற்றத்தை புரிந்துகொள்ளும் சிறு தொழில்கள்தான் எதிர்காலத்தில் நிலைத்து நிற்கும்.

ஒரு குடும்பத்தின் முதல் தொழில் வருமானம் —
சில நேரங்களில் அந்த வீட்டின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, அதன் கனவுகளின் மொழியையே மாற்றிவிடுகிறது.

(தொடரும்…)

ஒரு சிறு தொழில் எப்படி ஒரு குடும்பத்தை மாற்றுகிறது? Part 01 — “ஒரு தொழிலின் பிறப்பு”

ஒரு சிறு தொழில் எப்படி ஒரு குடும்பத்தை மாற்றுகிறது?Part 01 — “ஒரு தொழிலின் பிறப்பு”

#முர்ஷித் 

Part 01 — “ஒரு தொழிலின் பிறப்பு”

சில நேரங்களில் ஒரு தொழில் என்பது வெறும் வருமான முயற்சி அல்ல.
அது ஒரு குடும்பத்தின் அமைதியான புரட்சி.

ஒரு தாயின் கண்ணீரில் இருந்து பிறக்கும் எதிர்காலம்.

ஒரு தந்தையின் தோல்வியடைந்த சம்பள வாழ்க்கைக்கான பதில்.

ஒரு இளைஞனின் “வேலை கிடைக்கவில்லை” என்ற வலியின் மாற்றுப்பெயர்.
Industrial Development Board of Ceylon இல் கடந்த பல ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவத்தில், நான் ஆயிரக்கணக்கான சிறு தொழில் முனைவோர்களை சந்தித்திருக்கிறேன். அவர்களில் பலரிடம் பொதுவாக இருந்த ஒரு விஷயம் என்னவெனில் — அவர்கள் தொழிலை ஆரம்பித்தது ஆசையால் அல்ல; அவசியத்தால்.

ஒரு பெண், தனது குழந்தையின் பள்ளிக் கட்டணத்தை செலுத்த முடியாமல் வீட்டிலேயே மசாலா தூள் தயாரிக்கத் தொடங்கினார்.

ஒரு இளைஞன், வெளிநாடு செல்ல முடியாததால் சிறிய printing unit ஒன்றை ஆரம்பித்தார்.

ஒரு குடும்பம், கடன் சுமையில் சிக்கிய நிலையில் வீட்டின் முன்பகுதியில் snacks தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தது.

இவை statistics அல்ல.

இவை நம் நாட்டின் அமைதியான பொருளாதார வரலாறுகள்.

சிறு தொழில்கள் பெரும்பாலும் மிகச் சிறிய இடங்களில் பிறக்கின்றன.

ஒரு சமையலறை.
ஒரு garage.
ஒரு சிறிய வாடகை அறை.
அல்லது ஒரு மர நிழல்.

ஆனால் அந்தச் சிறிய இடங்களில்தான் பெரிய கனவுகள் உருவாகின்றன.
பலர் நினைப்பது போல, ஒரு தொழிலை ஆரம்பிக்க முதலில் பெரிய முதலீடு தேவையில்லை.

அதற்கு முன் தேவைப்படுவது:

•ஒரு பிரச்சினையை காணும் பார்வை
•முயற்சி செய்யும் மனநிலை
•தோல்வியை தாங்கும் பொறுமை
•மற்றும் “நாளை நல்லதாக இருக்கும்” என்ற நம்பிக்கை

இலங்கையின் கிராமிய பொருளாதாரத்தை நெருக்கமாகப் பார்த்தால், சிறு தொழில்கள் வெறும் பொருட்களை உற்பத்தி செய்யவில்லை.

அவை:
•குடும்பங்களை காப்பாற்றுகின்றன
•பெண்களை சுயநிறைவு பெறச் செய்கின்றன
•இளைஞர்களுக்கு மரியாதையான வாழ்வாதாரத்தை உருவாக்குகின்றன
•சமூகத்தில் பணப்புழக்கத்தை உயிர்ப்பிக்கின்றன

ஒரு சிறிய தொழில் ஆரம்பிக்கும் போது, அது ஒரே ஒருவரின் வாழ்க்கையை மட்டுமே மாற்றாது.

அதன் தாக்கம் மெதுவாக ஒரு குடும்பத்திலிருந்து ஒரு சமூகத்திற்கும், அங்கிருந்து ஒரு பிரதேச பொருளாதாரத்திற்கும் பரவுகிறது.

ஆனால் இங்கே ஒரு கேள்வி இருக்கிறது.
ஏன் இன்னும் பல இளைஞர்கள் தொழில் ஆரம்பிக்க பயப்படுகிறார்கள்?

ஏனெனில் நமது சமூகத்தில் இன்னும் “சம்பள வேலை” பாதுகாப்பாகவும், “தொழில்” ஆபத்தாகவும் கற்பிக்கப்படுகிறது.

கல்வி நிறுவனங்களில் வேலை தேட கற்பிக்கப்படுகிறது; வேலை உருவாக்க கற்பிக்கப்படுவதில்லை.

இதனால் பல திறமைகள் வேலைவாய்ப்பு வரிசைகளில் நிற்கின்றன.

ஆனால் உலக பொருளாதாரம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது.

Digital economy, home-based production, online marketing, AI-driven commerce போன்ற புதிய காலம் உருவாகிக்கொண்டிருக்கிறது.

இந்த புதிய காலத்தில் சிறு தொழில்கள் இனி “சிறியவை” அல்ல.
அவை எதிர்கால தேசிய பொருளாதாரத்தின் அடித்தளமாக மாறிக்கொண்டிருக்கின்றன.

ஒரு நாடு வளர வேண்டுமெனில், அதன் நகரங்கள் மட்டும் வளரக் கூடாது. 

அதன் கிராமங்களும் உற்பத்தி செய்ய வேண்டும்.
அதன் இளைஞர்களும் உருவாக்க வேண்டும்.
அதன் பெண்களும் பொருளாதாரத்தில் உரிமையுடன் நிற்க வேண்டும்.

ஒரு சிறு தொழிலின் பிறப்பு —
சில நேரங்களில் ஒரு குடும்பத்தின் மறுபிறப்பாக மாறுகிறது.

தொடரும்..

Monday, 13 April 2026

ஒரு ஊடகப் பாரம்பரியத்தின் மறைவு: ஏ. எல். எம். சலீம் – சேவையால் செதுக்கப்பட்ட ஒரு வாழ்வு (1949–2026)

எம். ஏ. எம். முர்ஷித் (இலக்கியன்)

இலங்கை ஊடக வரலாற்றின் ஆழமான அடுக்குகளில் சில பெயர்கள் வெறும் தனிநபர் அடையாளங்களாக இல்லை; அவை காலத்தின் குரல்களாகவும், சமூக மனசாட்சியின் பிரதிபலிப்புகளாகவும், ஒரு தலைமுறையின் சிந்தனைச் சாளரங்களாகவும் நிலைத்து நிற்கின்றன. அந்த வரிசையில் திகழ்ந்தவர்—மூத்த ஊடகவியலாளர், கலாபூஷணம் ஏ. எல். எம். சலீம்.
அவரது மறைவு ஒரு மனிதரின் பிரிவு அல்ல; அது ஒரு ஊடக மரபின் மௌனமாதல். ஒரு காலம் தன்னையே இழந்துகொண்ட தருணம். எழுத்தின் வழியாக சமூகத்தின் நரம்புகளைத் தொட்ட குரல் ஒன்று இன்று அமைதியின் அகல வெளியில் கரைந்துவிட்டது.

பிறப்பு – புரட்சியின் விதை

1949 செப்டம்பர் 14 ஆம் தேதி, மர்ஹூம்களான எஸ். பி. ஆதம்லெவ்வை மற்றும் ஆமீனா உம்மா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த சலீம், சிறுவயதிலிருந்தே சிந்தனைத் தீப்பொறி கொண்டவராக அறியப்பட்டார். மர்ஹூம் ஏ. எல். எம். அமீன், ஏ. எல். எம். நயீம், சித்தி சல்மா, சித்தி சுபைரா ஆகியோரின் அன்பு சகோதரராக வளர்ந்த அவர், ஒரு ஊடக மரபின் உள்மன அடித்தளத்தில் உருவான ஆளுமை.
அவரது வாழ்க்கைத் தேர்வுகளும், மனித உறவுகளும் கூட ஒரு வகையில் புரட்சிகரமானவை. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பதிவு வைத்திய அதிகாரி டாக்டர் ஜெஸ்மீன் அவர்களை தனது வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்தது, அவரது பாரம்பரிய எல்லைகளைத் தாண்டிய சிந்தனையின் வெளிப்பாடாகும்.

அவரது குடும்ப வாழ்வு அன்பின் ஒழுக்கத்தோடு செழித்தது. அகீலா மற்றும் அகீல் என்ற இரு பிள்ளைகளை உயர்ந்த கல்வியுடனும் மதிப்புடனும் வளர்த்து, மென்பொருள் பொறியியலாளர்களாக உருவாக்கிய அவர், ஒரு தந்தையாகவும் குடும்பத் தலைவராகவும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.

ஊடகப் பயணம் – ஒரு வாழ்நாள் அர்ப்பணிப்பு

1960களின் நடுப்பகுதியில், வெறும் 17 வயதுடைய இளைஞனாக ஊடகத் துறையில் காலடி பதித்த சலீம், பின்னர் அந்தத் துறையின் உயிரோட்டமாகவே மாறினார்.
வீரகேசரி, சுதந்திரன், தினபதி, சிந்தாமணி, சூடாமணி, நவமணி, விடிவெள்ளி, சுடரொளி, தினகரன், தினக்கதிர், யாழ் உதயன்—இந்தப் பத்திரிகைகள் அவரது பணிப்பாதையின் நிலையங்கள் மட்டுமல்ல; அவை அவரது சிந்தனையின் பரவலுக்கான மேடைகளாக இருந்தன.

பின்னர், காலத்தின் மாற்றங்களை உணர்ந்த அவர், இணைய ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் தன்னை மாற்றிக் கொண்டு, காலத்தோடு பயணித்தார். இது அவரது உயிர்த்துடிப்பு மிக்க சிந்தனையின் அடையாளமாகும்.

அவரது ஊடகப் பணி ஒருபோதும் பொழுதுபோக்காக அமையவில்லை. அது அவரது மூச்சாகவும், உள்ளார்ந்த பொறுப்பாகவும் இருந்தது. பொருளாதார லாபம் குறைவாக இருந்தபோதிலும், அவர் தனது வாழ்க்கையை முழுமையாக ஊடகத்துறைக்கே அர்ப்பணித்தார்.

எழுத்தின் ஆழம் – சமூகத்தின் குரல்

சலீம் அவர்கள் செய்திகளை எழுதவில்லை; சமூகத்தின் ஆழ்மனக் குரல்களை வடிவமைத்தார்.
அவரது எழுத்துகள் அரசியல், சமூக மற்றும் பண்பாட்டு பரிமாணங்களை ஒருங்கிணைத்த சிந்தனைப் பதிவுகளாக இருந்தன. குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் உரிமைகள், சமூக சமத்துவம், அடையாளப் போராட்டங்கள் ஆகியவை அவரது எழுத்தின் மையமாக இருந்தன.

அந்தக் கட்டுரைகள் இன்று ஒரு காலத்தின் சமூக வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும் ஆவணங்களாகத் திகழ்கின்றன.

யுத்த காலம் – துணிச்சலின் சோதனை

யுத்தம் என்பது வெறும் துப்பாக்கிச் சத்தமல்ல; அது உண்மையின் சிதைவு.
அந்தச் சூழலில், பலர் மௌனத்தைத் தேர்ந்தெடுத்த போது, சலீம் உண்மையைத் தேர்ந்தெடுத்தார். தகவல் கட்டுப்பாடுகள், உயிர் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றின் நடுவிலும் அவர் தனது ஊடகப் பணியைத் தொடர்ந்தார்.

அவரது செய்திகளின் வழியாக, போரின் நடுவே சிக்கிய மக்களின் குரல் உலகுக்குச் சென்றது.

சமநிலைஅவரது வலிமை

அவர் எந்த ஒரு தரப்பின் குரலாகவும் மாறவில்லை; எல்லா தரப்புகளுக்கும் இடையிலான பாலமாக இருந்தார். அரசியல்வாதிகள், நிர்வாகிகள், சமூக அமைப்புகள், பல்வேறு சக்திகள்—அனைவருடனும் தொழில்முறை மரியாதையுடனான உறவை பேணினார்.
அவரது நேர்மை, அவருக்கு எல்லா தரப்பினரிடமும் மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்றுத்தந்தது.

ஒரு தலைமுறையின் உருவாக்கி

சலீம் அவர்கள் எழுதிய கட்டுரைகள் மட்டுமல்ல; அவர் உருவாக்கிய மனிதர்களே அவரது பெரிய சாதனை.

நான் உட்பட பல இளம் ஊடகவியலாளர்களுக்கு அவர் வழிகாட்டியாக இருந்தார். செய்தியின் உண்மைத் தன்மை, மொழியின் நயம், தொழில்முறை ஒழுக்கம்—இவற்றை அவர் தனது வாழ்வின் வழியாக கற்றுக் கொடுத்தார்.

அவரது இறுதி காலங்களிலும் கூட, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஊடக மானவர்களுக்கு வருகைதரு விரிவுரையாளராக செயல்பட்டது, அறிவைப் பகிரும் அவரது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

ஊடக ஒழுக்கம் – ஒரு வாழும் கொள்கை

“வேகத்தை விட உண்மை முக்கியம்” என்ற அவரது கொள்கை, இன்று மேலும் பொருத்தமுடையதாக உள்ளது.

அவர் செய்திகளை வெளியிடுவதில் அவசரப்படவில்லை; உண்மையை உறுதிப்படுத்துவதில் உறுதியானார். இந்த அணுகுமுறை அவரை ஒரு நம்பகமான ஊடகவியலாளராக உயர்த்தியது

சமூக மற்றும் கலாச்சார பங்களிப்புகள்

சலீம் அவர்களின் பணி ஊடகத்துறையைத் தாண்டியது.

நிந்தவூர் கலை இலக்கிய பேரவை, நிந்தவூர் கலாச்சார அதிகார சபை, “அகர ஆயுதம்” சமூக கலை இலக்கிய தளம், நிந்தவூர் மத்தியஸ்த சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் தலைவராகவும், ஆலோசகராகவும், செயற்பாட்டு உறுப்பினராகவும் அவர் பங்களித்தார்.

இந்த அமைப்புகளின் வழியாக அவர் சமூக ஒற்றுமை, கலாச்சார முன்னேற்றம், இளைஞர் வளர்ச்சி ஆகிய துறைகளில் நிலையான தாக்கத்தை ஏற்படுத்தினார்.

ஊடக அமைப்புகளில் தடம் பதித்த தலைவர்

கிலக்கிழங்கை ஊடகவியலாளர் அமைப்பின் தலைவராகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவராகவும், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உபத் தலைவராகவும் அம்பாரை மாவட்டத்தை தளமாக கொண்டியங்கும் பல்வேறுபட்ட ஊடக அமைப்பிக்களில் பல்வேறுபட்ட பொறுப்புக்களிலும் அவர் செயல்பட்டார். இந்த அமைப்புகளின் வளர்ச்சி, ஒழுங்கமைப்பு மற்றும் ஊடக ஒற்றுமை மேம்பாட்டில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
அவர் ஒரு நிர்வாகி மட்டுமல்ல; ஊடகக் கூட்டிணைவின் சிந்தனைச் சாளரமாகவும் இருந்தார்.

நினைவில் நிலைக்கும் மனிதர்

அவர் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்திலும், அவரது ஊடக நண்பர்கள் மற்றும் அமைப்புகள் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தது, அவரது மனிதநேயத் தொடர்புகளின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது.

அவரது மறைவு ஒரு முடிவல்ல; அது தொடரும் ஒரு மரபின் தொடக்கம். அவரது எழுத்துகள், அவரது மாணவர்கள், அவரது சமூகப் பங்களிப்புகள்—all continue to speak on his behalf.

அங்கீகாரங்கள்மரியாதையின் மொழி

அவரது நீண்டகால சேவை பல்வேறு விருதுகளால் கௌரவிக்கப்பட்டது—
வாழ்நாள் சாதனையாளர் விருது, கலாபூஷணம் பட்டம், முதலமைச்சர் “வித்தகர்” விருது, சாஹித்தியசூரி பட்டம்.

ஆனால் இவை அனைத்தையும் தாண்டி, மக்களின் மனங்களில் அவர் பெற்றிருந்த நம்பிக்கையே அவரது உயர்ந்த அங்கீகாரம்.

மறைவு அல்ல – தொடரும் குரல்

சலீம் இன்று இல்லை.
ஆனால் அவர் மறைந்துவிடவில்லை.

அவர் எழுதிய ஒவ்வொரு வரியிலும்,
அவர் உருவாக்கிய ஒவ்வொரு ஊடகவியலாளரிலும்,
அவர் தொடந்த ஒவ்வொரு மனதிலும்—
அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார்.

இறுதி சிந்தனை

ஒரு உண்மையான ஊடகவியலாளர் இறக்கமாட்டார்;
அவர் குரலாகப் பிரிந்து காலத்தைத் தொடர்வார்.

சலீம்—
உங்கள் எழுத்து இன்னும் பேசுகிறது.
உங்கள் சிந்தனை இன்னும் வழிகாட்டுகிறது.
உங்கள் பாரம்பரியம் இன்னும் வளர்கிறது.