Sunday 1 September 2019

சிவப்புத் தொப்பி முபாறக் மௌலவியுடனான நேர்காணல்..

இலக்கியன் முர்ஷித்
இலங்கையின் அரசியல் சூழலில் மிகவும் பரீட்சையமான பெயர்தான் முபாற‌க் அப்துல் மஜீத். மௌல‌வி (மௌல‌வி. முபாற‌க்) தீவிர அரசியல், சமூக செயற்பாட்டாளராக அறியப்படும் இவர் ப‌த்திரிகைத் துறை பட்டதாரி, மட்டுமல்லாமல் இலங்கை முஸ்லிம் உலமாக் கட்சி எனும் அரசியல் கட்சியின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியர்களின் புனித நூலான திருக் குர்ஆனை தமிழுக்கு மொழி பெயர்த்தவர்களுள் இவர் மிகவும் முக்கியமானவர், இதனால் இலங்கையை மையமாகக் கொண்டு இயங்கிவரும் தாருல் குர்ஆன் எனும் இஸ்லாமிய கல்வி மையத்தினால் இவருக்கு கலாநிதிப் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.