Tuesday 26 August 2014

கண்ணீர் மடல்...



உலகில் காதலர்கள் எல்லாம்
பேசிக்கொள்ளும் ஒரே மொழி
மௌனம்!..


நீ கண் அசைத்தால்
இடிந்து போகிறது
என் இதயம்!..

என் இரவுகளுக்கு
தானம் செய்கிறேன்
உன் நினைவுகளை!..

என் கண்கள்
பேசும் பாசை
உனக்கு புரிகிறதா?..

என் விழிகள் வரைகிறது
ஆயிரம் மடல்கள்
உனக்காகவே!..

புதிதாய் மலர்கிறது
என் கண்கள்
உன்னை காணும் போதெல்லாம்!..

கனவுகளை மட்டும் ஓட விட்டு
என் கண்களை
திருடிக் கொண்டாய்!..

என் கனவில்
அஞ்சலிட்ட கடிதம்
உன்னை வந்து சேர்ந்ததா?..

என் கண்கள்
அடிக்கடி பிரசவிக்கிறது
கண்ணீரை மட்டும் தான்!..

* மு.அ.மு முர்சித் (இலக்கியன்)*




பிரபல சிறுகதையாசிரியர் எஸ். முத்துமீரானின் '' மானிடம் உயிர் வாழ்கிறது'' எனும் சிறுகதைக்கான எனது விமர்சனம் 2014.08.23 (சனி) அன்று வீரகேசரியின் 'சங்கமம்' இலக்கியப்பகுதியில் வெளியானது
வீரகேசரியின் ''சங்கமம்'' இலக்கியப் பகுதி 

முதுமை


மன மலரில்
தேன் ஊறுகிறது...
தேக வேரில்
தண்ணீர் ஏருகிறது...
முதுமை!
தகமை!
முதுமை!
அறிவின் முதிர்ச்சி!

கல்விச்சோலையில்
தென்றலாய் உலாவியபோது
பட்டமும் பதவியும்
இரு கண்களாய் கிடைத்தன!..
செல்வமும் கௌரமும்
வாழ்வின் தூண்களாய்
நிலை நிறுத்தின!..
இப்படி...
இப்படி...
அழைப்பிதல் தந்து
அழைத்துச்சென்றது முதுமையிடம்...

போசாக்கான உணவுக்குளத்தில்
குளித்தபோது
ஆரோக்கியம் பளிச்சிட்டது!..
பால்,பழங்கள்,
தாணியங்கள்,தாவரங்கள்
உண்டபோது
நோய்கள் பயந்தோடின
நெருங்காமல் 
அவை மாண்டன!..

அழகான கவிதைபோல்
மனைவி!..
முத்து பூத்தாற்போல்
இரு பிள்ளைகள்!..
சொத்தாக வித்தாக
வாழ்வின் சத்தாக
கல்விப்பால் ஊட்டி
நல்ல நிலை செய்தபோது
அமைதி வெளியில்
சிறகு முளைத்து பறந்தேன்!..

கற்கண்டு வாழ்க்கையில்
தித்திப்பு கரந்தேன்!...
முதுமை மாணிக்கமானது
பட்டை தீட்டதீட்ட!..
முதுமை முழுமையானது..
மகிழ்ச்சி ஊறஊற!..

வாழக்கை சாலையின்
ஓரத்தில் வந்து நின்றபோது
பௌர்ணமி கொண்டது 
என் முதுமையில்
கல்வியால் வென்றேன
என் ஆயுளை!..

('தேசிய முதியோர் வாரம்-2010' யில் நிந்தவூர் பிரதேச செயலக போட்டியில் வெற்றி பெற்றது)

*மு.அ.மு முர்சித் (இலக்கியன்)*