Friday 7 April 2017

"இளைஞர்கள் பற்பல விடயங்களில் அடிப்படையே தெரியாமல் கருத்து சொல்லவும், ஒரு செய்தியை வெளியிட துணிவதும் கொடுங் குற்றமாகும்."


முர்சித்_முகம்மது

அரசியல்வாதிகள் இன நல்லிணக்கம் தொடர்பில் இனிக்க இனிக்க பேசினாலும், உள்ளுர் தேர்தல் அரசியலை மையப்படுத்தி இனவாதத்தை பரப்புபவர்களாகவும், மக்களுக்கிடையே ஒரு சேய்மைநிலையை தொடர்ந்தும் வைத்திருக்கவுமே விரும்புகின்றனர்.
“வேகமும், விவேகமும், துணிச்சலும், மாற்றத்தை நேசித்தலும், புரட்சியில் பங்கேற்றலும் பருவங்களுக்கு அப்பாற்பட்டது.” என்கிறார் இளம் ஊடகவியலாளர் முகமட்முஸாறப் (வயது33) .

இலங்கையின் தமிழ்த் தொலைக்காட்சித்துறையில் தனித்துவமான கருப்பொருட்களைக் கொண்ட இரசவாதம், ஆட்டேகிராப், பள்ளிக்கூடம், அதிர்வு , வாங்க பழகலாம் போன்ற நிகழ்ச்சித் தயாரிப்பிலும் தொகுப்பிலும் குறுகிய காலத்திற்குள்ளே பரந்துபட்ட பரப்பினுள் ரசனையையும் சிந்தனையையும் தூண்டியுள்ளார்.மாற்றுக் கருத்துக்களையும் புதிய சிந்தனைகளையும் வரவேற்று உரையாடும் இவர், கட்டுமரத்திற்காக எம்.ஐ.சி.ரீ யின் கட்டுமரம் செயற்திட்டத்திற்கான இலங்கையின் கிழக்குப்பிராந்திய ஊடகவியலாளர் முர்சித் முஹம்மதோடு "நல்லிணக்க சூழலில் ஊடகங்களும் இளைஞர்களும்" பற்றி தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.