Sunday 18 December 2016

‘அம்ரிதா ஏயெம் ' இலக்கியத்தின் மூலம் சமாதானம்! புதிய நாகரீகம் ஏற்படுத்தப்படுவது அவசியம்!



இலக்கியம் என்பது அறியாமை என்னும் ஒரு முனைக்கும், அறிந்துகொள்ளல் என்னும் இன்னொரு முனைக்கும் இடையில் அப்பாவி மக்களின் இரத்தத்தையும், வெறுப்பையும் கொண்டிராததும், மாறுபட்ட நுண்ணுர்வுகளை மிக நுட்பமாக எடுத்துரைக்கும் கலை என்னும் எரிபொருளை கொண்டு வேகமாக ஓடும் ஒரு வாகனம்.

“இலக்கியம் என்பது அறியாமை என்னும் ஒரு முனைக்கும், அறிந்துகொள்ளல் என்னும் இன்னொரு முனைக்கும் இடையில் அப்பாவி மக்களின் இரத்தத்தையும், வெறுப்பையும் கொண்டிராததும், மாறுபட்ட நுண்ணுர்வுகளை மிக நுட்பமாக எடுத்துரைக்கும் கலை என்னும் எரிபொருளை கொண்டு வேகமாக ஓடும் ஒரு வாகனம். இலக்கியமானது இவ்வாறான தொடர்பாடலை சிறப்பாக செய்வதற்குரிய வாகனமாகும். எனவே இலக்கியத்தின் மூலம் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு, புதிய நாகரீகம் ஏற்படுத்தப்படுவது அவசியமாகும்.”என்கிறார் ‘அம்ரிதா ஏயெம்’ என அறியப்படும் ஏ.எம். றியாஸ் அகமட்.

Thursday 25 August 2016

நாட்டார்கலைகளைப் பேணுவதில் முஸ்லிம்கள் அசமந்தம்:--எழுகவி_ஜெலீல்

தமது நாட்டார் கலை இலக்கிய வடிவங்களைப் பேணிப் பாதுகாப்பதில் முஸ்லிம்கள் அசமந்தமாக இருக்கிறார்கள் என்கிறார் கிழக்கு இலங்கையைச் சேர்ந்த எழுகவி ஜெலீல் (49) “நாட்டார் பாடல்களுக்கு ஆசியரியர்கள் இல்லை” எனும் பொது நியதியை தகர்த்து “அரை நிலை நாட்டார் பாடல்கள்” எனும் புது வடிவத்தினை இலங்கையின் கிழக்குப் பகுதியில் முன்கொண்டு செல்கிறார் ஜெலீல்.
முஸ்லிம் கலை, இலக்கியப் பாரம்பரியம் மிக்க தென்கிழக்குப் பிராந்தியத்தின் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் வாழ்பவர்தான் இவர் , நாட்டார் பாடல்களை சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல பாடுவதிலும் அதனைப் பாதுகாத்துத் தொகுதியாக்குவதிலும் 35வருடங்களுக்கு மேலாக தன்னை ஈடுபடுத்தி வருபவர்.

Friday 5 August 2016

கவிதை பற்றிய புரிதல் மற்று பயிற்சிப்பட்டறை

முர்சித் முகம்மது

சாய்ந்தமருது ஒன்று கூடுவோம் இளைஞர் அமைப்பு இளைஞர் நல்லிணக்க நிலையத்தில் (20.11.2015)  அன்று இடம்பெற்ற கவிதைப்பட்டறை (கவிதை பற்றிய புரிதல் மற்று பயிற்சிப்பட்டறை) மிகச்சிறப்பாக நடந்தது. 

இதை இளைஞர் கலை, இலக்கியப் பேரவை நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இன்நிகழ்வில் கவிஞர், விமர்சகர் றியாஸ் குரானா கலந்துரையாடினார். அத்தோடு கவிஞர் ஜெமில் உள்ளிட்ட கவிதைச் செயற்பாட்டாளர்களும் கலந்தகொண்டு பேசினர்.

இங்கு கவிதை, கவிதையின் மொழியூடான வளர்ச்சி, இன்றைய காலகட்டத்திலான கவிதை இயங்குதளம்  மற்றும் கவிதை  தொடர்பிலான புரிதல் உள்ளிட்ட பல விடயங்கள் கருத்தாடலாக கையாளப்பட்டதுடன் கேள்வி பதில் முறையும் கையாளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏழை மீனவனின் இருண்ட கனவு


முர்சித் முகம்மது


இலங்கையின் கரையோரக் கிராமங்களில் வாழும் மக்கள் பெரும்பாலும் கடல் மீன்பிடியையே தனது ஜீவிதமாகக் கொண்டு வாழ்கின்றனர். இவர்களுள் சிலயில் தங்களின் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் மெழுகுவர்த்தியாய் கரைந்துகரைந்து அவர்களின் வாழ்வின் மீதானகனவுகள் கானல் நீர் போல கனவாகிறது. அந்தவகையில் கிழக்கிலங்கையின் நிந்வூர் பிரதேசத்தில் வாழும் மீனவர்தான் 60 வயதாகும் நாகூர்த்தம்பி. இவரின் வாழ்க்கை விபரம் தெரிந்த காலம் முதல் இன்றுவரை கடலோடு கதையா கலந்துகிடக்கிறார். அவருடனான அனுபகப்பதிவு இதுரைத்தவிர ஏனையவர்கள் கடலைத் தவிர மாற்று வாழ்வாதாரமற்ற நிலை.