முர்சித் முகம்மது
இலங்கையின் கரையோரக் கிராமங்களில் வாழும் மக்கள் பெரும்பாலும் கடல் மீன்பிடியையே தனது ஜீவிதமாகக் கொண்டு வாழ்கின்றனர். இவர்களுள் சிலயில் தங்களின் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் மெழுகுவர்த்தியாய் கரைந்துகரைந்து அவர்களின் வாழ்வின் மீதானகனவுகள் கானல் நீர் போல கனவாகிறது. அந்தவகையில் கிழக்கிலங்கையின் நிந்வூர் பிரதேசத்தில் வாழும் மீனவர்தான் 60 வயதாகும் நாகூர்த்தம்பி. இவரின் வாழ்க்கை விபரம் தெரிந்த காலம் முதல் இன்றுவரை கடலோடு கதையா கலந்துகிடக்கிறார். அவருடனான அனுபகப்பதிவு இதுரைத்தவிர ஏனையவர்கள் கடலைத் தவிர மாற்று வாழ்வாதாரமற்ற நிலை.
இலங்கையின் கரையோரக் கிராமங்களில் வாழும் மக்கள் பெரும்பாலும் கடல் மீன்பிடியையே தனது ஜீவிதமாகக் கொண்டு வாழ்கின்றனர். இவர்களுள் சிலரைத்தவிர ஏனையவர்கள் கடலைத் தவிர மாற்று வாழ்வாதாரமற்ற நிலையில் தங்களின் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் மெழுகுவர்த்தியாய் கரைந்துகரைந்து அவர்களின் வாழ்வின் மீதானகனவுகள் கானல் நீர் போல கனவாகிறது. அந்தவகையில் கிழக்கிலங்கையின் நிந்வூர் பிரதேசத்தில் வாழும் மீனவர்தான் 60 வயதாகும் நாகூர்த்தம்பி. இவரின் வாழ்க்கை விபரம் தெரிந்த காலம் முதல் இன்றுவரை கடலோடு கதையா கலந்துகிடக்கிறார். அவருடனான அனுபகப்பதிவு இது.
கதகதப்புடன் மெல்லிய குளிர்காற்று இளம்தளிர்களோடு பழங்கதை நாகூர்த்தம்பி பேச நீலக்கடலின் காரிருளைக் கிழித்துக் கொண்டு பிரசவம் பார்த்த தனது தோணிகளை கடலுக்குள் அனுப்பிய ஏக்கப்பெருமூச்சுடன் கடலலைகளை ஒதுக்கி விட்டு பெருமூச்சுவிட்டு நின்றார் நாகூர்த்தம்பி. 'ஏன்னப்பா நாகூர்த்தம்பி' என்றவுடன் இனந்தெரியாத சோகங்கள் மெல்லிய இழையாடவட்டப் புன்சிரிப்பை உதிர்த்த அவர் 'என்னப்பா' என்று எனது கேள்வியையே என்னைப்பார்த்துக் கேட்டார். 'இல்லண்ணஇ நெடுநாளாக சந்திக்ககிடைக்கவில்லை. அதான் சுகம் விசாரிக்கவந்தேன்' என்றேன். நேரமோ இரவு 9 மணியை முத்தமிட்டு இருந்தது. இருள் கவ்வி இருந்த இரவு அது. அமாவாசையை விழுங்கி ஏப்பம் விட்ட இரவு அது. அந்தகாரிருளையும் அவனது ஏக்கத்தையும் தொடர்புபடுத்தி இறைவன் எழுதும் நாடகம் தான் அவரைச் சூழசுழலும் வாழ்க்கை என்பதை எண்ண ஓட்டம் வெளிச்சம் போட்டது.
பெண்பிள்ளைகளை கரைசேர்க்க வேண்டியகாலத்தின் திணிப்பு அவனை ஆட்கொண்டு இருந்தது. பலதோணிகளை பல இடர்களுக்குள்ளும் செலுத்தி கரைசேர்த்த நாகூர்த்தம்பிக்கு இது சாமர்த்தியமான சவாலாக இருக்கின்றது என்றால் ஒரு சமூகத்தின் திணிப்பை அந்த உள்ளம் எங்கனம் போராடி வெல்லும் என்பதை நினைத்துப் பார்க்கமுடியாதுள்ளது. நாகூர்த்தம்பியின் வாழ்க்iயில் இப்படி ஒரு கனவாஇ கலையாதவண்ணமாய்இ கலங்கரை விளக்கமாய் தனது மகளை வக்கீலாக பார்க்கவேண்டும் என்று அவன் ஆசைப்படுவது காலத்தின் மீதுஅவன் கொண்டகாதலா இல்லை இந்த சமுதாயத்தின் மீது அவன் கொண்ட வெறுப்பாபுரியவில்லை. ஏனெனில் நேரம்கூட 10 மணியைத்தாண்டி இருந்தது. இருள் எங்கும் சூழ்ந்து இருந்தது. அந்த காரிருளுக்கும் தொலைவில் இருந்து தோணியில் தெரியும் விளக்கின் மெல்லிய ஒளிக்கீற்று போல அவனது எதிர்காலசிந்தனையும் என்னைஆக்கிரமித்துவிட்டது.
No comments:
Post a Comment