Thursday 27 July 2017

“பக்கச்சார்பு மிகவும் அவசியமானது” Vs “பக்கச்சார்பு என்பது வால்பிடித்தல்.”


முர்சித் முகம்மது

நடுநிலைமை என்பது நடைமுறைக்கும் நீதிக்கும் பொருத்தமில்லாத வெறும் வார்த்தையாகும், நடுநிலைவகித்தல் பெண்ணுடைய சந்தர்பங்களை பலயீனப்படுத்துகின்றது...



தனிநபரோ அல்லது ஏதேனும் அமைப்போ தமது கருத்துக்கள் மற்றும் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் போது இரண்டு வார்த்தைகளால் அவை எடைபோடப்படுகின்றன. அவற்றை அடிப்படையாகக் கொண்டே குறித்த கருத்திற்கும் அதை வெளிப்படுத்திய தரப்பிற்குமான பெறுமானம், பெறுமதி நிர்ணயிக்கப்படுவதோடு அதனை ஏற்றுக்கொள்வதா அல்லது உதாசீனம் செய்வதா என்பன தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றமை நிதர்சனமான உண்மை. அவைதான்
நடுநிலைமை
• பக்கச்சார்பு
 இவை தொடர்பில் நடுநிலமை என்றால் நீதி என்றும் பக்கச்சார்பு என்றால் அநீதி என்றும் பொதுவான கருதுநிலை இருப்பினும் , பல்தரப்பட்ட மக்கள் மத்தியில் இந்த வார்த்தைகளின் புரிதல் எவ்வாறுள்ளது? இதை அறிந்து கொள்வதற்காக பல்தரப்பட்டவர்களையும் த கட்டுமரத்திற்காக அணுகினோம்.

சமூகங்களுக்கிடையில், இலக்கியம் சமரசத்தை வளர்க்காது.!-இலக்கிய செயற்பாட்டாளர் றியாஸ் குரானா

முர்சித் முகம்மது

'இனங்களுக்கிடையில் சமரசத்தை வளர்ப்பதுதானா இலக்கியத்தின் பணி? இது ஒரு சிக்கலான கேள்வி. ஆனால், இலக்கியத்திற்கு இப்படி சமரசத்தை உருவாக்கும் ஆற்றல் இருக்கிறது என சிறுபிள்ளைத்தனமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அது பிற்போக்கான நம்பிக்கை மாத்திரமே.'

றியாஸ் குரானா
றியாஸ் குரானா(42) தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு கலகக் காரனாக அறியப்படும் இவர்இலங்கையின் கிழக்கிலுள்ள அக்கரைப்பற்று எனும் சிறுகிராமத்தைச் சேர்ந்தவர்.  இலக்கிய வாசகன், கவிஞன், விமர்சகன் என பரந்தபட்ட தளங்களில் இயங்குபவர். இதுவரை 5 புத்தகங்களை எழுதி வெளியிட்டிருக்குமிவர், பெருவெளி இலக்கியச் சிற்றிதழின்நிறுவனர்களில் ஒருவர். தமிழ்மொழி தவிர்ந்த பல பிறமொழிகளில் இவரதுகவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதிலும், ஆங்கிலத்தில்  மொழிபெயர்க்கப்பட்டு poemhunter, allpoetry, poetrysoup,muse india போன்ற இணைய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. நவீனத்துவம், பின்நவீனத்துவம் சார்ந்து தொடர்ச்சியாக உரையாடுவதோடு,  கவிதையியல் தொடர்பான கோட்பாட்டுரீதியிலான கட்டுரைகளையும்எழுதிவருகிறார்.

த கட்டுமரன் : தமிழ் இலக்கியச் சூழலின் வரலாறு சார்ந்து, உங்களுடைய பார்வை எத்தகையதாகவுள்ளது?
றியாஸ் குரானா : தமிழ் இலக்கியம் சார்ந்த வரலாற்றுரீதியலான பார்வை என்பது மிக சிக்கலான ஒன்று. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. தமிழ் இலக்கியம் என்பது இரண்டாயிரம் வருடங்களுக்கு அதிகமான காலத்தைக்கொண்டிருப்பது முதலாவது விசயம். இரண்டாவது விசயம், அனைத்து மொழிகளிலும் இலக்கியம் என்பது பலவகையான போக்குகளையும், வரலாற்று குழப்பங்களையும் கொண்டிருப்பதைப்போல தமிழ் இலக்கியங்களுக்குமுண்டு.