Wednesday, 5 August 2026

புலம்பெயர்தல்



துயரத்தின் மீதான 
பாடல்கள்
வழிந்தோடும்
தெருக்கள்.

புகை.
பனி.

புலரியின்
முதல் மூச்சில்

என் ஆத்மா
தன்
காலணிகளைக் கழற்றி
நடக்கத் தொடங்குகிறது.

ஒவ்வொரு விடியலும்
ஒரு பிறப்பு அல்ல—

நேற்றைய
என்னிடமிருந்து
ஒரு
புலம்பெயர்தல்.

— முர்ஷித்

No comments:

Post a Comment