புலரும் பகலையும் கடந்து
இரவின் கருமையைத் தழுவி
வழிந்தோடும் நினைவுகள்
உன்னை சாம்பல் நிற
பூனைக்குட்டியாய் மாற்றி
எனது கனவுகளின் தோட்டத்தில்
மெது மெதுவாய் பதுங்கி
பூக்களின் தேனைத் தேடியலையும்
அழகு மிகு பூச்சிகளின் இருப்பை
என்னில் வெறுமையாக்குகிறது
நிலவொளியில் குளித்த உன் நிழல்
என் இதயத்தில் படர்ந்து
துக்கத்தின் ஓசையை எழுப்பி
அமைதியை கலைத்து விடுகிறது
கனவு அவிழ்ந்து எழுந்ததும்
உன் நினைவுகள் மீண்டும் வந்து
என்னை துன்புறுத்தி, வாழ்க்கையின் அர்த்தத்தை கேள்விக்குறியாக்குகிறது.
#முர்ஷித்

No comments:
Post a Comment