Sunday 7 September 2014

காதல்!
















காதல்!-என்ற
மூன்றெழுத்துக்குள் முழு
பிரபஞ்சமேயடங்கி கிடக்கிறது!..

காதல்! தான்
உயிருக்கான அத்தாட்சி!..
உணர்வுகளுக்கான அரிச்சுவடி!..

எரிமலை குமுறுகிறதா?
'காதல்!..' என்ற சொல்லை
காற்றில் தூதுவிடுங்கள்-அது
பனிமலை ஆகிவிடும்!..

சூரியனில் ரோஜா
நட வேண்டுமா?..
காதலை நீராக்குங்கள்!..
காதலை உரமாக்குங்கள்!..

ஓராயிரம் ஆண்டுகள் செய்த
தவவலிமை கூட ஓர் நொடியில் 
பஸ்பமாகிவிடுகிறது!..
காதல் பார்வையில்!..

காதல்!
ஆக்கவும் செய்கிறது!..
காதல்!
அழிக்கவும் செய்கிறது!..

காதலில் தான்
உலகம் பிறந்தது!..
காதலால் தான்
உலகம் இறக்கயிருக்கிறது!..

 மு.அ.மு. முர்சித் (இலக்கியன்)

No comments:

Post a Comment