Saturday 10 May 2014

அன்னை





















அன்பு,பாசம்,
அரவணைப்பு,பாதுகாப்பு
இவை எல்லாம்
அன்னை என்ற சொல்லின்
அவதாரங்கள்!..

அன்னை!
பத்து மாதங்கள் தான்
கருவறையில் சுமந்தாள்!..
ஆயுள்வரை-தன்
நெஞ்சறையில் சுமக்கிறாள்!..

உனக்கு ஓர்
தீங்கு நிகழ்கிறதா?
உயிரிருந்தும் உயிரற்று
போகிறாள்
அன்னை!..

உலகை
அறிமுகம் செய்தவர்
தந்தையாகலாம் ...
தந்தையை தந்தவள்
அன்னைதான்!..

அன்னை!
ஓர் முத்தம் இடுகிறாள்
ஆயுளோ.. 
தூய்மையடைகிறது!..
ஆறிவை சலவை செய்கிறாள்
உனக்கு
நிலாக்காட்டி சோறூட்டிய போது!..

அன்னை தான்-உன்
நன்மை!..

அன்னையை
அபிசேகம்செய்யுங்கள்.. 
அன்பால்!.. -ஆயுள் முழுதும்
அழகு செய்யுங்கள்...
ஆதரவால்!..

அன்னை தான்-உன்
நன்மை!..

*இலக்கியன் மு.முர்சித்*

No comments:

Post a Comment