Tuesday 6 May 2014

தர்மம்













பத்து ரூபா
கொடுக்காத நீ
நாளை
தொலைப்பாய்
பத்துஆயிரம் ரூபாவை!..

உனது தலையை
நீ
காக்கவில்லை
காக்கிறது தர்மம்!..

கொடுப்பதற்காக
நீளுகின்ற உனதுகை
சாவியாக மாறும்
சுவனக்கதவை 
திறப்பதற்கு!..

ஏழைகளின் கண்ணீரை
தொடைக்கின்ற
உனது தர்மம்.
உன்வீட்டுக்கு
அழைத்து வருகிறது
சந்தோசத்தை!..

உலோபியின்
செல்வத்திற்கு
உயிர் இல்லை!..
உனது செல்வம்
உயிர் பெருகிறது!..
தர்மம்
செய்யச்செய்ய....

நீ பாழுங்கிணறு
ஆகிறாய்
தர்மம் 
செய்யாதுதபோது!..

நீ
மழைபோன்று
ஆகிறாய்
தர்மம்
செய்கிறபோது!..

உனது
தர்மங்கள்
சிப்பியில் விழுகிற
நீர்த்துளி போல
மறுமையில் விளைந்திடும்
நல் முத்துக்களாய்!..

இருக்கும்போது
இல்லை என்று 
சொல்லிவிடாதே..
நீ
மனிதன் இல்லை என்று 
சொல்லிவிடும்-அது!..

தர்மம்
ஆயிறம் வணங்களையும்
விடப்பெரியது!..

தர்மம் செய்!
பெரும் தாகத்துடன்!..
பெரும் தேடலுடன்!..


*இலக்கியன் மு.முர்சித்*

No comments:

Post a Comment