Saturday 3 May 2014

செம் மொழி















வார்த்தைப்பூக்களுக்கு 
வசந்த காலம்!..
பேனை முற்களில்
கவி பூக்கள் மலர்ந்தபோது!..

தேனீக்களின் தேர்வலம்!
காகித நிலவில்
தேன் ஊற்று 
கண்டுபிடிக்கப்பட்டபோது !.. 

மொழி மாநாட்டில்
'தமிழ்'
பௌர்ணமி தேன் கூடு!..

மொழி!
என்ற சொல் இனிக்கிறது -அதை
உச்சரிக்கும் போது!..

நாவும் புனிதமடைகிறது
தமிழ் எழுத்துகளில்-அது
உயிர்க்கும்போது!..

செம் மொழி!..
நம் மொழி!..
தொன் மொழி!..
பொன் மொழி!..
தமிழ் மொழி..
வாழிய வாழிய..
பெரு மொழி..
வாழிய வாழியவே....

*இலக்கியன் மு.முர்சித்*

No comments:

Post a Comment