Saturday 3 May 2014

சிந்தனை செய்




சிந்தனை செய் !-அது
உன்னை புதுப்பிக்கிறது!..

சிறகுகள் முளைக்கிறதா?
உன் கனவுகளுக்கு...
நாளைய உலகம்
உன்கையில்!..

சிந்தனைகளை செயலால்
பட்டை தீட்டுகிறாயா?
உன் தோல்விகளும்
வெற்றி படியாகிறது!..

சிந்தனை செய் !-அது
உன்னை புதுப்பிக்கிறது!..

புத்தாக்க சிந்தனையை நம் 
சொத்தாக்க வேண்டும்!..
தித்திப்பாய்;வசந்த
மத்தாப்பாய் வாழ்க்கை மணக்க!...

அக்கினி சுடரில்-ஓர்
தேன்துளி கசிகிறது!..
விடாமுயற்சி1- அதில்
தேன்தேடியபோது!

சிந்தனை செய் !-அது
உன்னை புதுப்பிக்கிறது!..

இலக்கியன் மு.முர்சித்

No comments:

Post a Comment