Monday 28 April 2014

காதல் உலகம்














காதல்!
என்று சொல்லிப்பார்
உலகமும் பீனிக்ஸ் 
பறவைதான்!..

காதல் தான் உலகம்!
உலகம் தான் காதல்!
என்றான போது!..

காதல்!
சடத்துவத்தை மீறியது-அது
அத்வைதமானது!..

வாழத் தெரியாதவனாகிறாய்-நீ
காதலிக்க தெரியாத போது!..

உடம்பில் 
உயிர் இல்லாதவன்
''பிணம்'' இல்லை...

உணர்வில்
காதல் இல்லாதவன்
''உயிருள்ள பிணம்'' ஆகின்றான்!..

*இலக்கியன் மு.முர்சித்*

No comments:

Post a Comment