Thursday 24 April 2014

சிவப்பு ஒப்பங்கள்

















கனவுள் மேய்ந்த 
ஆயிரம் இரவுகள்!,
கதவுகள் உடைந்த
ஓட்டை முகாம்கள்!, 

சொந்தமண் தொலைத்து
தெருக்களில் நாங்கள்..
முகவரிதேடும் வாழ்க்கை!..
''அகதி'' என்ற பெயரில்...

இவை எல்லாம் 
இருக்கப்போவதில்லை...

துப்பாக்கி ரவைகளுக்கும்,
பல்குழல் செல்களுக்கும்
'மனித நேயம்' தெரிந்திருந்தால்!..

அந்த
கறுப்பு நினைவுகளில் 
சிவப்பு ஒப்பங்கள்-மனித
வெள்ளை மனங்கள்
கொள்ளை போனதால்!..

*இலக்கியன் மு.முர்சித் *

No comments:

Post a Comment