Friday 23 February 2024

மடையன் மாதிரி...

அறிவீனர்களை சுட்டிக்காட்ட "மடையன்" எனும் வார்த்தை சமகாலத்தில் பொதுவாக அன்றாடம் நாம் பயன்படுத்துவதுண்டு. இவ்வார்த்தை வரலாற்று சிறப்பு மிக்கது.

பண்டைய காலத்தில், பெருவெள்ளம் ஏற்படும் போது, அணைகளில் நீர் நிரம்பி உடைப்பெடுப்பதற்கு முன், பேரழிவைத் தடுத்து மக்களையும் மக்களின் பொருளாதாரத்தையும் காக்கும் நோக்கில், பெருக்கெடுத்து வரும் அணைகளுக்குள் குதித்து சுழியோடி "மடை" எனும் மதகுகளை திறக்கும் தியாகத் தொழில் செய்பவனையே "மடையன்" என்பர்.

 இத்தொழில் செய்பவர்களில் பலர், வெள்ளத்தோடு வெள்ளமாக மக்களுக்காக தங்கள் உயிரையும் உடலையும் தியாகம் செய்வதும் உண்டு. இப்படியான கருத்தாழம் மிக்க வார்த்தை இப்போது ஏளனத்திற்குரிய வார்த்தையாக மாற்றப்பட்டிருக்கிறது.

#முர்ஷித்

No comments:

Post a Comment