Tuesday 1 September 2015

இரண்டு உள்ளே.. இரண்டு வெளியே.. ஒன்று மட்டும் மேலே..


முர்சித் முகம்மது


பாவங்களால் கட்டப்பட்ட

ஆலயங்களின்
வாசல்களில்
யாசகம் கேட்கின்றன
நன்மைகள்
..
..
முற்றுப்புள்ளிகளுக்குள்
முற்றுகை செய்கின்றன
ஆயிரம் கேள்விக்குறிகள்
..
..
எனது நித்திரைகளுக்குள்
ஒரு சிலந்தி
வளர்ந்திருக்கவேண்டும்
அழகழகாய் கனவுகளை
பின்னுகின்றதே
..
..
ஓநாய்களின் மேய்ச்சலில்
புல்வெளியின் பனித்துளிகள்
ஆவியாகியிருக்ன்றன
..
..
தண்ணீர்த்தொட்டிக்கு
ஒப்பனை செய்கிறது

நிலவு
..
..
-முர்சித்-

No comments:

Post a Comment