Tuesday 29 April 2014

ஓர் கண்ணீர் துளி




















என்
கல்லறை கனாக்களில்
நம்
காதல் கவிதைகளின்
ராஜாங்கம்!..

உன்
புருவ வாட்களால்
புன்னகை புயல்
தாக்கியபோது !..

நீ
கல்யாணி வாசித்தாய்
முகாரிய வாடை -என்
நினைவுகளில்!.. 

'நீ
என் நிழலாய்'என்றாய்
'நீயாய் நான்' என்றபோது!.. 

நீ-என் 
கல்லறையில் மலர்கள்
வைக்கத்தேவையில்லை!..

ஓர் 
கண்ணீர் துளி போதும்
நம்
காதலாவது வாழட்டும்!..

*இலக்கியன் மு.முர்சித்*  

No comments:

Post a Comment